இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

வெள்ள பாதிப்புகளை சரி செய்ய பொதுமக்களிடம் நிதி கேட்டாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்புகளை சரி செய்ய பொதுமக்களிடம் நிதி கேட்டதாக பரவும் நியூஸ்கார்டானது 2 ஆண்டுகளுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய நியூஸ்கார்டாகும்.

142 எம்பிகளை சஸ்பெண்ட் செய்ததை வரவேற்பதாக கூறினாரா எடப்பாடி பழனிச்சாமி?
142 எம்பிகளை சஸ்பெண்ட் செய்ததை வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தர முடியாது பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறினாரா?
தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தர முடியாது என்று நயினார் நாகேந்திரன் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

அமர் பிரசாத் ரெட்டி காமசூத்ரா புத்தகத்தை படிப்பதாக பரவும் எடிட் படம்!
அமர் பிரசாத் ரெட்டி காமசூத்ரா புத்தகத்தை படிப்பதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

பேரிடர் நிவாரண நிதி குறித்து கேலியாக பேசினாரா பாஜக அமைச்சர் ஜிதேந்தர சிங்?
பேரிடர் நிவாரண நிதி குறித்து ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்தர சிங் கேலியாக பேசியதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)