ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Check142 எம்பிகளை சஸ்பெண்ட் செய்ததை வரவேற்பதாக கூறினாரா எடப்பாடி பழனிச்சாமி?

142 எம்பிகளை சஸ்பெண்ட் செய்ததை வரவேற்பதாக கூறினாரா எடப்பாடி பழனிச்சாமி?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: 142 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம் – எடப்பாடி பழனிசாமி

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் ஜூனியர் விகடன் வெளியிட்டதாகப் போலியாக பரவி வருகிறது.

142 எம்பிகளை சஸ்பெண்ட் செய்ததை வரவேற்கிறோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

”142 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது சரியே!மக்களவையில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை மத்திய அரசே சரி செய்துவிடும். இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்தக் கோரியது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக 142 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்! எடப்பாடி பழனிசாமி!”
என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.

142 எம்பிகளை
Screenshot from Facebook/Damodarkannan

Facebook Link

Screenshot from Facebook/saraboji

Facebook Link

Screenshot from Facebook/tp.jayaraman.5

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழக அரசின் வெள்ள நிவாரண தொகையை நாம் தமிழர் கட்சிக்கு நிதியாக அனுப்பக் கேட்டாரா சீமான்?

Fact Check/Verification

142 எம்பிகளை சஸ்பெண்ட் செய்ததை வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் ஜூனியர் விகடன் பெயரில் வெளியாகிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் அவ்வாறு எந்த நியூஸ்கார்டும் வெளியாகியிருக்கவில்லை.

எனவே, விகடனின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவரும், டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருமான ஐ. பிரிட்டோவைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டோம். அப்போது அவர், ”வைரலாகும் நியூஸ்கார்டினை நாங்கள் வெளியிடவில்லை; அது தவறாக பரவி வருகிறது” என்று விளக்கமளித்தார்.

எனவே, அதிமுக தரப்பில் அதன் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனை இதுதொடர்பாக அழைத்து பேசியபோது, “வைரலாகும் செய்தி போலியானது” என்று உறுதி செய்தார்.

Also Read: அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவினருடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

 142 எம்பிகளை சஸ்பெண்ட் செய்ததை வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation With, I.Britto, Vikatan, Dated December 21, 2023
Phone Conversation With, Kovai sathyan, ADMK, Dated December 21, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular