Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் 25 ரூபாய் கட்டணம், நான்கு முறைக்கு மேல் 50 ரூபாய் கட்டணம் என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்தியா முழுவதும் கொரானா பரவலின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக உள்ளது. கடந்த வருடத்தை காட்டிலும் இரண்டாம் அலை மூலம் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதிக அளவில் காணப்படுகின்றது.
தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களுக்கு வேலையின்மை, பொருளாதார நெருக்கடி போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு வருமானம் இல்லாததால் வாங்கிய வங்கி கடனை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் வங்கி கடன் தவணைகளை செலுத்த 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் தற்போது எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து நான்கு முறை வரை பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் 25 ரூபாய் கட்டணமும், நான்கு முறைக்கு பின் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் 50 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும் என்று அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archive Link: https://archive.ph/xFXMB

Archive Link: https://archive.ph/r9VEM

Archive Link: https://archive.ph/tcAFt
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்க கட்டணம் வசூலிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய இத்தகவல் குறித்து எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஆய்வு செய்தோம்.
இதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல் முற்றிலும் தவறானது என்பதை நம்மால் அறிய முடிந்தது. உண்மையில் எஸ்பிஐ வங்கி கணக்கில் வைப்பு வைத்திருக்கும் தொகைக்கு ஏற்ப ஏடிஎம் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இதுக்குறித்த தெளிவான அட்டவணையும் எஸ்பிஐ வங்கித் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த அட்டவணை வாசகர்களின் பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் அடிப்படையில் பார்க்கும்போது, மெட்ரோ நகரங்களில் அனைத்து விதமான எஸ்பிஐ கணக்குகளிலிருந்தும், ஒவ்வொரு மாதமும் எஸ்பிஐ ஏடிஎம்மில் ஐந்து முறையும், மற்ற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறையும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என்பது நமக்கு தெளிவாகின்றது.
இதுவே மெட்ரோ அல்லாத பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்க ஐந்து முறையும், மற்ற வங்கி ஏடிஎம்களில் ஐந்து முறையும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது எஸ்பிஐ ஏடிஎம் பரிவர்த்தனை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறான ஒன்று என்பது நமக்கு தெளிவாகின்றது.
எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் 25 ரூபாய் கட்டணம், நான்கு முறைக்கு மேல் 50 ரூபாய் கட்டணம் என்று சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
State Bank Of India: https://www.sbi.co.in/web/personal-banking/information-services/kyc-guidelines/debit-card-related-charges?inheritRedirect=true
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
November 24, 2025
Ramkumar Kaliamurthy
November 24, 2025
Ramkumar Kaliamurthy
November 17, 2025