புதன்கிழமை, ஜூன் 26, 2024
புதன்கிழமை, ஜூன் 26, 2024

HomeFact Checkமாநிலத் தலைவர் பதவி தந்தால் பாஜகவில் சேர முடிவெடுத்துள்ளாரா செங்கோட்டையன்?

மாநிலத் தலைவர் பதவி தந்தால் பாஜகவில் சேர முடிவெடுத்துள்ளாரா செங்கோட்டையன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மாநிலத் தலைவர் பதவி தந்தால் பாஜகவில் சேர முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முடிவு.

Fact: செங்கோட்டையன் இத்தகவலை மறுத்துள்ளார்.

அதிமுக மூத்தத்தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், மாநிலத் தலைவர் பதவி கொடுத்தால் பாஜகவில் சேர செங்கோட்டையன் முடிவெடுத்துள்ளதாகவும் தினகரன் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாநிலத் தலைவர் பதவி தந்தால் பாஜகவில் சேர முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முடிவெடுத்துள்ளதாக தினகரன் வெளியிட்ட செய்தி

Report Link | Archive Link

இச்செய்தியை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

மாநிலத் தலைவர் பதவி தந்தால் பாஜகவில் சேர முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முடிவெடுத்துள்ளதாக தினகரன் வெளியிட்ட செய்தி

X Link

மாநிலத் தலைவர் பதவி தந்தால் பாஜகவில் சேர முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முடிவெடுத்துள்ளதாக தினகரன் வெளியிட்ட செய்தி

X Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதா?

Fact Check/Verification

மாநிலத் தலைவர் பதவி தந்தால் பாஜகவில் சேர முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முடிவெடுத்துள்ளதாக தினகரன் செய்தி வெளியிட்டிருந்ததை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில்  இச்செய்தி பொய்யான செய்தி என்றும், இச்செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் செங்கோட்டையன் கூறிய மறுப்பு செய்தி nba 24×7 யூடியூப் பக்கத்தில் பகிர்ந்திருந்ததை காண முடிந்தது.

இதுத்தவிர்த்து வேறு சில ஊடகங்களிலும் இதுக்குறித்து செய்தி வெளிவந்திருந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

தொடர்ந்து தேடுகையில் செங்கோட்டையன் அவரது எக்ஸ் பக்கத்திலும் வைரலாகும் இத்தகவலுக்கு மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

அப்பதிவில் கூறப்பட்டிருந்ததாவது, “என்னைப்பற்றி அவதூறாகவும், உண்மையில்லாத வகையிலும் பத்திரிக்கையில் செய்திகள் வெளியிட்டதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இது போன்ற ஆதாரமில்லாத செய்திகளை பத்திரிகை தர்மத்திற்கு எதிராக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்”

இதனையடுத்து தேடுகையில் அஇஅதிமுகவின் அதிகாரப்பூர்வ ஐடி விங் பக்கத்திலும் இத்தகவல் பொய்யானது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.

Also Read: மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்றாரா அமித் ஷா?

Conclusion

மாநிலத் தலைவர் பதவி தந்தால் பாஜகவில் சேர முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முடிவெடுத்துள்ளதாக தினகரன் வெளியிட்ட செய்தி தவறானதாகும்.இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet Post from Sengottaiyan, AIADMK, Dated May 02, 2024
Tweet Post from AIADMK IT Wing, Dated May 02, 2024
Report from nba 24×7, May 02, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular