Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தமிழன் உயிரை கொடுத்தாவது தனி தமிழ்நாடு உருவாக்குவான் என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியதாக பரவும் நியூஸ்கார்டு.
வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று மாலைமலர் தரப்பு உறுதி செய்துள்ளது.
“தமிழன் என்று ஒரு இனம் உண்டு! அவனுக்கு என்று ஒரு குணம் உண்டு!! வேண்டிவந்தால் உயிரை கொடுத்தாவது தனி தமிழ்நாடு உருவாக்குவான்!!!” என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சபதத்தை மறந்துவிட்டு காலில் செருப்பு அணிந்த அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
தமிழன் உயிரை கொடுத்தாவது தனி தமிழ்நாடு உருவாக்குவான் என்று ஆ.ராசா பேசியதாக பரவும் நியூஸ்கார்டானது மாலை மலரின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டில் உருவாக்கபட்டிருப்பதால், அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதா என தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள பிப்ரவரி 22 அன்று இவ்வாறு எந்த ஒரு நியூஸ்கார்டையும் அந்நிறுவனம் வெளியிட்டிருக்கவில்லை.
ஆகவே மாலைமலர் ஊடகத்தின் டிஜிட்டல் ரதீஷை தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது; அந்த நியூஸ்கார்டை மாலை மலர் வெளியிடவில்லை என்று தெரிவித்தார்.
இதனையடுத்து தனி தமிழ்நாடு குறித்து ஆ.ராசா அண்மையில் பேசியுள்ளாரா என்று ஆராய்ந்தோம். அதில் அண்மையில் இதுக்குறித்து எதுவும் அவர் பேசி இருக்கவில்லை.
ஆனால் 2022 ஆம் ஆண்டில் பேசியுள்ளதை அறிய முடிந்தது. அதிலும் அவர் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டிருப்பதுபோல் தமிழன் உயிரை கொடுத்தாவது தனி தமிழ்நாடு உருவாக்குவான் என்று பேசி இருக்கவில்லை.
பெரியார் தனி தமிழ்நாடு வேண்டும் என்று அழைத்தபோது, அவரிலிருந்து விலகி இந்தியா வாழ்க என்று நாங்கள் கூறினோம், கூறிக்கொண்டிருக்கின்றோம். அண்ணா வழியில் செல்லும் எங்களை பெரியார் வழியில் தனிநாடு கேட்கும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள் என்றே அவர் பேசி இருந்தார்.
இதுக்குறித்த வீடியோ நியூஸ் 18 தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் ஜூலை 4, 2022 அன்று பதிவிடப்பட்டிருந்தது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் உள்ளிட்ட ஊடகங்களும் இதுக்குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து திமுக ஐடி விங்கை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில் அவர்களும் இத்தகவல் தவறானது என்று தெரிவித்தனர்.
Also Read: தவெக தலைவர் விஜய் கையை தோள் மீதிருந்து தூக்கியெறிந்த மாணவி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
தமிழன் உயிரை கொடுத்தாவது தனி தமிழ்நாடு உருவாக்குவான் என்று ஆ.ராசா பேசியதாக பரவும் நியூஸ்கார்டானது முற்றிலும் போலியானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation With Ratheesh, Maalaimalar
Phone Conversation With Suresh, DMK IT Wing
YouTube Video by News 18 Tamilnadu, Dated July 04, 2022
Report by Indian Express Tamil, Dated July 04, 2022
Self Analysis
Vijayalakshmi Balasubramaniyan
April 7, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 4, 2025
Ramkumar Kaliamurthy
April 2, 2025