Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரத் துவங்கியுள்ள நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
தமிழகத்தில் வருகின்ற மே 3 ஆம் தேதி முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு துவங்க இருக்கிறது. கொரோனா நெருக்கடியால், பொதுத்தேர்விற்காக மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்புகளில் மூழ்கியிருந்தது மாறி, கடந்த ஜனவரி 2021ல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் படிப்படியாக கொரோனா குறைந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் தமிழகத்தில் மீண்டும் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
தற்போது, பிளஸ் 2 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பதாகக் கூறி செய்திப்புகைப்படம் ஒன்று ஷேர் சாட் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததாகப் பரவும் புகைப்படம், நியூஸ் 7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு போன்றே பரவுவதால் அதனை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். ஏனெனில், பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அரசு சார்பில் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஆனால், அதன் முடிவில் நமக்கு அதுபோன்ற எந்த அறிவிப்பும் எந்தவொரு செய்தி ஊடகத்திலும் வரவில்லை என்பது தெரிய வந்தது. மேலும், முதல்வரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்திலும் அது போன்ற எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
எனவே, நியூஸ் 7 தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப்பக்கங்களை ஆராய்ந்து பார்த்தோம். அதிலிருந்து, பரவும் நியூஸ் கார்டின் வடிவமைப்பு பழையது எனவும்; தற்போது வேறொரு வகையான வடிவமைப்பை நியூஸ் 7 தொலைக்காட்சி உபயோகிப்பது நமக்குத் தெரிய வந்தது. மேலும், அதிலிருந்த எழுத்துருவும் நியூஸ் 7 தொலைக்காட்சியுடையதில் இருந்து மாறுபட்டு காணப்பட்டது.
தொடர்ந்து, நியூஸ் 7 தொலைக்காட்சி ஊடகத்தின் செய்தியாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டோம். அதனடிப்படையில், குறிப்பிட்ட அந்த நியூஸ் கார்டு போலியாக வடிவமைக்கப்பட்டு சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுவது நமக்குத் தெரிய வந்தது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தது போன்று பரவுகின்ற செய்திப்புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது; தவறான செய்தி என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
News7 Tamil: https://twitter.com/news7tamil
Twitter (CMO TamilNadu): https://twitter.com/CMOTamilNadu
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 9, 2025
Vijayalakshmi Balasubramaniyan
May 19, 2025
Ramkumar Kaliamurthy
May 5, 2025