Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிட’நல் திருநாட்டிற்கு பதிலாக ‘தமிழர்’நல் திருநாடு என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் வெளியிட்டது ஆனந்த விகடன்.
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். உண்மையான நியூஸ்கார்டில் திராவிடநல் திருநாடு என்றே எழுதப்பட்டிருந்தது.
டிடி தமிழ் சேனல் நடத்திய விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ எனும் வரிகள் தவிர்த்து பாடப்பட்டது.
இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இது கவனக்குறைவால் ஏற்பட்டது என்றும் அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் டிடி தமிழ் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்த்தாய் வாழ்த்து ஏற்கனவே திருத்தப்பட்டுள்ளது என விமர்சித்ததோடு, நாதக ஆட்சிக்கு வந்தால் இந்த தமிழ்த்தாய் வாழ்த்து நீக்கப்படும், அதற்கு மாற்றாக வேறு பாட்டு போடப்படும் என்று பேசி இருந்ததார்.
இந்நிலையில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர்நல் திருநாடும்’ என்று குறிப்பிட்டு ஆனந்த விகடன் நியூஸ்கார்டு ஒன்றை வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: துண்டு சீட்டு இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவேன் என்று கூறினாரா ஆளுநர்?
தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிட’நல் திருநாட்டிற்கு பதிலாக ‘தமிழர்’நல் திருநாடு என்று குறிப்பிட்டு ஆனந்த விகடன் நியூஸ்கார்ட் வெளியிட்டதாக பரவும் படத்தை கவனித்து பார்க்கையில் அப்படத்தில் எழுத்துக்கள் மாற்றப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை காண முடிந்தது.
இதனையடுத்து ஆனந்த விகடனின் சமூக ஊடகப்பக்கங்களில் வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து ஆராய்கையில் அதன் எக்ஸ் பக்கத்தில் ‘தென்னிந்தியாவின் குரலை வடக்கு கேட்க வேண்டும்! – யோகேந்திர யாதவ் (இந்த வார ஆனந்த விகடனில்…)’ என்று தலைப்பிட்டு வைரலாகும் புகைப்படத்துடன் பதிவு ஒன்று பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது
ஆனால் அப்படத்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர்நல் திருநாடும்’என்று எழுதப்பட்டிருக்கவில்லை; ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்றே எழுதப்பட்டிருந்தது.
இதன்படி பார்க்கையில் வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என தெளிவாகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
இதனைத் தொடர்ந்து விகடனின் ஆசிரியர்களுள் ஒருவரான ஐ.பிரிட்டோவை தொடர்புக் கொண்டு பேசுகையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.
Also Read: ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிப்பு… இச்சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததா?
தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிட’நல் திருநாட்டிற்கு பதிலாக ‘தமிழர்’நல் திருநாடு என்று குறிப்பிட்டு ஆனந்த விகடன் நியூஸ்கார்ட் வெளியிட்டதாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். உண்மையான நியூஸ்கார்டில் திராவிடநல் திருநாடு என்றே எழுதப்பட்டிருந்தது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
X post from Ananda Vikatan, Dated October 19, 2024
Phone Conversation with Brotto, Editor, Vikatan
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்
Vijayalakshmi Balasubramaniyan
February 17, 2025
Ramkumar Kaliamurthy
January 25, 2023
Gayathri Jayachandran
May 14, 2020