கே.என்.நேரு செய்தது மிகப்பெரிய தவறு என்று திமுக தகவல்தொடர்பு அணி செயலாளர் டிஆர்பி.ராஜா கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

திமுக அமைச்சரான கே.என்.நேரு, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளைச் சந்தித்து பேசிய விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், திமுக எம்எல்ஏவும், தகவல் தொடர்பு அணி செயலாளருமான டிஆர்பி.ராஜா, “கே.என்.நேரு செய்தது மிகப்பெரிய தவறு. பெரியார், அண்ணா, கலைஞர் வளர்த்த திமுக இன்று ஒரு சாமியாரின் காலடியில் அமர்ந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது” என்று கூறியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்திய மாணவர்களை நேரில் வந்து சந்தித்தாரா ரஷ்ய அதிபர் புதின்?
Fact Check/Verification
கே.என்.நேரு செய்தது மிகப்பெரிய தவறு என்று டிஆர்பி.ராஜா கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
தந்தி டிவி பெயரில் குறிப்பிட்ட நியூஸ்கார்டு வெளியாகியிருந்த நிலையில் சேனலின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்ட நியூஸ்கார்டு போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த தந்தி டிவியின் டிஜிட்டல் பிரிவைச் சேர்ந்த வினோத்திடம் கேட்டபோது அவரும் குறிப்பிட்ட நியூஸ்கார்டு போலியானது என்று உறுதி செய்தார்.
Conclusion
கே.என்.நேரு செய்தது மிகப்பெரிய தவறு என்று டிஆர்பி.ராஜா கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Thanthi TV
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)