Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: வயநாடு பேரிடரில் தாயை இழந்த குரங்குக்குட்டிகள்
Fact: வைரலாகும் வீடியோ வயநாடு வீடியோ துயரச் சம்பவம் நடப்பதற்கு முன்பே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இவ்வீடியோவிற்கும் வயநாடு பேரிடருக்கும் தொடர்பில்லை.
”வயநாடு பேரிடர் நிலத்தில் நெஞ்சை பதற வைக்கும் காட்சி..* * தாய் குரங்கை இழந்த இரண்டு குழந்தை குரங்கு குட்டிகள் மழையிலும் சேற்றிலும் ஆதரவு தேடி ஒருவரையொருவர் அனைத்துக்கொள்ளும் காட்சி” என்று குறிப்பிட்டு வீடியோ
ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: வயநாடு நிலச்சரிவில் இறந்தநிலையில் தன்னுடைய குழந்தையை அணைத்துள்ள தாய் என்று பரவும் AI புகைப்படம்!
வயநாடு பேரிடரில் தாயை இழந்த குரங்குக்குட்டிகள் என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இத்தேடலில் binduchaudhary485 என்ற பயனை ஐடியை கொண்ட டிக்டாக் பக்கத்தில் வைரலாகும் இவ்வீடியோ ஜூலை 20, 2024 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
இதன்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோ வயநாடு பேரிடர் நடந்த ஜூலை 30 ஆம் தேதிக்கு முன்னரே இப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது என அறிய முடிகின்றது.
தொடர்ந்து binduchaudhary485 என்ற பயனர் ஐடியை கொண்ட இந்த நபர் குறித்து தேடுகையில் அவர் நேபாளத்தை சார்ந்தவர் என அறிய முடிந்தது.
இந்த நபர் அவரது டிக்டாக் பக்கத்தில் வைரலாகும் வீடியோ தவிர்த்து குரங்கு தொடர்பாக பல வீடியோக்களை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
ஆனால் எந்த வீடியோவிலும் அந்த வீடியோக்கள் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவலை அவரை குறிப்பிட்டிருக்கவில்லை. அதேபோல் வைரலாகும் வீடியோவும் எங்கே எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவலை அவர் தெரிவித்திருக்கவில்லை.
இதன்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக வயநாடு பேரிடருக்கும் இந்த வீடியோவுக்கும் தொடர்பில்லை என்பதை மட்டும் தெளிவாக உணர முடிகின்றது. ஏனெனில் வயநாடு பேரிடர் நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பே இவ்வீடியோ பகிரப்பட்டுள்ளது.
வயநாடு பேரிடரில் தாயை இழந்த குரங்குக்குட்டிகள் என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோத்தகவல் தவறானதாகும். இவ்வீடியோவானது நேபாளத்தை சேர்ந்த டிக்டாக் பயனரால் வயநாடு நிலச்சரிவு சம்பவம் நடப்பற்கு பத்து நாட்களுக்கு முன்பே டிக்டாக்கில் பகிரப்பட்டுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
TikTok post from the user, binduchaudhary485, Dated July 20, 2024
Report from Vikatan, Dated July 20, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
August 16, 2024
Vijayalakshmi Balasubramaniyan
August 6, 2024
Ramkumar Kaliamurthy
August 6, 2024