Claim: பிரதமர் மோடி கால் பட்டதால் வயநாட்டில் பாலம் உடைந்தது.
Fact: இத்தகவல் தவறானதாகும். பிரதமர் பார்வையிட்ட பாலமும், உடைந்த பாலமும் வெவ்வேறானதாகும்.
“கடைசியாக ஒருத்தரு தன்னோடு கால் தடத்தை அந்த பாலத்துல பதிச்சார்.. முடிஞ்சது” என்று குறிப்பிட்டு பிரதமர் பாலம் ஒன்றின் மேல் நடக்கும் புகைப்படமும், பாலம் உடைந்தது குறித்த நியூஸ்கார்டு ஒன்றும் சேர்த்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியதா இந்தியா?
Fact Check/Verification
பிரதமர் மோடி கால் பட்டதால் வயநாட்டில் பாலம் உடைந்ததாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக பிரதமர் நடந்து சென்ற பாலம் குறித்து தேடினோம். இத்தேடலில் பிரதமர் மோடி வயநாட்டில் கட்டப்பட்ட பெய்லி பாலத்திற்கு வருகை தந்ததாக ஆல் இந்தியா ரேடியோ நியூஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அப்பதிவுடன் வீடியோ ஒன்று பகிரப்பட்டிருந்தது. அவ்வீடியோவில் பிரதமர் பாலத்தில் நடக்கும் காட்சியும் இடம்பெற்றிருந்தது.

இந்த பெய்லி பாலமானது இந்திய ராணுவ வீரர்களால் கட்டப்பட்ட தற்காலிக பாலமாகும்.
இதனையடுத்து பாலம் உடைந்த செய்தி குறித்து தேடினோம். இத்தேடலில் பெய்லி பாலத்திற்கு அருகில் இரண்டு கிராமங்களை இணைக்க ராணுவம் கட்டிய ஆற்றுப் பாலம் கனமழை காரணமாக உடைந்ததாக கேரளா கௌமுதி இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

இச்செய்தியில் வைரலாகும் பதிவில் பகிரப்பட்டிருந்த உடைந்த பாலத்தின் படமே இடம்பெற்றிருந்தது. பெய்லி பாலம் மூடப்பட்டதாகவும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் ஆன்மனோரமா இணையத்தளத்திலும் இதே செய்தி வெளியிட்டுருப்பதை காண முடிந்தது.

இதன்படி பார்க்கையில் பிரதமர் பார்வையிட்ட பெய்லி பாலம் உடையவில்லை; அதற்கு அருகில் இருந்த ஆற்றுப்பாலமே உடைந்துள்ளது என்பது தெளிவாகின்றது.
Also Read: அக்ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்த ஜோதிகா என்று பரவும் எடிட் புகைப்படம்!
Conclusion
பிரதமர் மோடி கால் பட்டதால் வயநாட்டில் பாலம் உடைந்ததாக பரவும் தகவல் தவறானதாகும். பிரதமர் பார்வையிட்டது பெய்லி பாலமாகும். இப்பாலமானது உடையவில்லை. இப்பாலத்திற்கு அருகில் இருந்த ஆற்றுப்பாலமே கனமழை காரணமாக உடைந்துள்ளது.
இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Report By Kerala Kaumudi, Dated August 13, 2024
Report By OnManorama, Dated August 13, 2024
X Post By All India Radio News, Dated August 10, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)