செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 13, 2024
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 13, 2024

HomeFact Checkவயநாடு நிலச்சரிவில் இறந்தநிலையில் தன்னுடைய குழந்தையை அணைத்துள்ள தாய் என்று பரவும் AI புகைப்படம்!

வயநாடு நிலச்சரிவில் இறந்தநிலையில் தன்னுடைய குழந்தையை அணைத்துள்ள தாய் என்று பரவும் AI புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: வயநாடு நிலசரிவுல வீட்டோட அடிச்சிட்டு போன குடும்பம்

Fact: வைரலாகும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.

வயநாடு நிலச்சரிவில் இறந்தநிலையில் தன்னுடைய குழந்தையை இறுக்கி அணைத்துள்ள தாய் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“வயநாடு நிலசரிவுல வீட்டோட அடிச்சிட்டு போன குடும்பம்… இறந்த நிலையிலும் தன்னோட குழந்தைய இருக்கி அணைச்ச படி தாய்.. . இயற்கை அழகானது மட்டும் இல்ல… அரக்கதனமானதும் கூட” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

Screenshot from x @8WjsL888fC0pAe1

X Link/Archived Link

Screenshot from x @lallu_twitz

X Link/Archived Link

வயநாடு
Screenshot from facebook/Pavithra Pavi

Facebook Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: வயநாடு நிலச்சரிவில் RSS ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக பரவும் பழைய படம்!

Fact Check/Verification

வயநாடு நிலச்சரிவில் இறந்தநிலையில் தன்னுடைய குழந்தையை இறுக்கி அணைத்துள்ள தாய் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தில் இயற்கைக்கு முரணாக பல இடங்களில் மங்கியும், கூர்மையாகவும் அமைந்திருந்த நிலையில் அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.

அதன்முடிவில், அப்புகைப்படம் riya119__ என்கிற சமூக வலைத்தளப்பக்கத்தில் கடந்த ஜூலை 01, 2024 அன்று ஷேர் செய்யப்பட்டிருந்தது. ஜூலை 30, 2024 அன்று கேரளத்தில் நிலச்சரிவு நிகழ்வு நடைபெற்ற நிலையில் அம்மாத தொடக்கத்திலேயே இப்புகைப்படம் ஷேர் செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து நம் தேடலில் கடந்த மே மாதம் இப்புகைப்படம் மற்றொரு சமூக வலைத்தளப்பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டிருந்தது. இதிலிருந்து, கேரள நிலச்சரிவிற்கும் இப்புகைப்படத்திற்கும் தொடர்பில்லை என்பது உறுதியானது.

மேலும், இப்புகைப்படத்தை Hive Moderation என்னும் AI  content detection tool மூலமாக ஆராய்ந்தபோது 98.9% AI மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படம் இது என்றும், Huggingface மூலமாக இப்புகைப்படம் 89% AI மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என்று உறுதியாகியது.

 Also Read: வயநாடு நிலச்சரிவு என்று பரவும் 2020ஆம் ஆண்டு இடுக்கி புகைப்படங்கள்!

Conclusion

வயநாடு நிலச்சரிவில் இறந்தநிலையில் தன்னுடைய குழந்தையை இறுக்கி அணைத்துள்ள தாய் என்று பரவும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Sources
Instagram post, July 1, 2024
Hive Moderation tool
HuggingFace tool


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular