Claim: உதயநிதி மன்னிப்பு கேட்கும் வரை நிர்வாண போராட்டம் செய்வேன் – அர்ஜூன் சம்பத்
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று கதிர் நியூஸ் தெளிவு செய்துள்ளது.
சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு இந்தியா முழுவதும் பெரும் பேசுப்பொருளாக மாறி இருக்கும் நிலையில், “உதயநிதி மன்னிப்பு கேட்கும் வரை அவர் வீட்டின் முன் ஒற்றைக்கால் தூக்கி நடராஜர் கோலத்தில் நிர்வாண போராட்டம் செய்வேன்!” என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஹிஜாப் அணிந்து தேசியக்கொடி ஏற்றிய கர்நாடகா கலெக்டர் எனப்பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact Check/Verification
உதயநிதி மன்னிப்பு கேட்கும் வரை நிர்வாண போராட்டம் செய்வேன் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக அர்ஜூன் சம்பத் இவ்வாறு ஒரு கருத்தை பேசியுள்ளார என்பதை உறுதி செய்ய அவரது சமூக ஊடகப் பக்கங்களை ஆராய்ந்தோம். அதில் உதயநிதியின் பேச்சை கண்டித்து, உதயநிதியும் சேகர்பாபுவும் பதவி விலக வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் பேசி இருக்கும் வீடியோ ஒன்று அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
நாளை (செப்டம்பர் 7) தமிழ்நாடு முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை கொடுத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அர்ஜூன் சம்பத் அவ்வீடியோவில் பேசி இருந்தார். ஆனால் நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என்று அவர் எங்கேயும் தெரிவித்திருக்கவில்லை.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது கதிர் நியூஸின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து கதிர் நியூஸின் ஆசிரியர் பிரதீப்பை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரித்ததில், அந்த நியூஸ்கார்டு போலியானது என அவர் தெரிவித்தார்.
Also Read: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விநாயகர் சதுர்த்தி என்று பரவும் கொரோனா காலகட்ட பழைய செய்தி!
Conclusion
சனாதனத்தை எதிர்க்கும் யாரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Tweet from Arjun Sampath, Founder and President, Hindu Makkat Katchi, Dated September 04, 2023
Phone Conversation with Pradeep, Kathir News
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)