சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkஉக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை என் தோளிலா கொண்டு வர முடியும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை என் தோளிலா கொண்டு வர முடியும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை என் தோளிலா கொண்டு வர முடியும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக நியூஸ்கார்டுகள் சில சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ரஷ்யாமற்றும் உக்ரனைக்கிடையே போர் நடந்து வரும் சூழலில் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை இந்தியா கொண்டு வர இந்திய அரசு முயற்சித்து வருகின்றது.

இந்நிலையில், “மாணவர்கள மீட்பதில் ஏன் தாமதம் என்ற கேள்விக்கு, “சொந்த நாட்டில் படிக்காமல்  உக்ரைன் சென்ற மாணவர்களை என் தோளில் வைத்தா பறந்து கொண்டு வர முடியும்”” என்று மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக நியூஸ்கார்டுகள் சில வைரலாகி வருகின்றது.

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்ளை என் தோளிலா கொண்டு வர முடியும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்டு - 1

Facebook Link

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்ளை என் தோளிலா கொண்டு வர முடியும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்டு - 2

Facebook Link

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்ளை என் தோளிலா கொண்டு வர முடியும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்டு - 3

Facebook Link


Also Read: 
கட்சியை கலைக்கப்போகிறேன் என்றாரா சீமான்?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை என் தோளிலா கொண்டு வர முடியும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக நியூஸ்கார்டுகள் வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

முன்னதாக நிர்மலா சீதாராமன் இவ்வாறு கூறினாரா என்பதை உறுதி செய்ய அவரது  அதிகாரப் பூர்வ சமூக ஊடகப் பக்கங்களிலும் பொது ஊடகங்களிலும் இதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் நிர்மலா சீதாரமன் தனது டிவிட்டர் பக்கத்தில்,  இது என்ன? இது எங்கிருந்து வந்தது? பொய்! இப்படி ஒரு கேள்வி-பதில் நிகழவில்லை. Totally fake!”  என்று வைரலாகும் செய்தியை மறுத்து  பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

Archive Link

இதனையடுத்து  புதிய தலைமுறை நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், இந்த நியூஸ்கார்டை புதிய தலைமுறை வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இதில் வைர்லாகும் நியூஸ்கார்ட் பொய்யானது என்று புதிய தலைமுறை தரப்பில் மறுப்பு தெரிவித்திருந்ததை காண முடிந்தது.

Archive Link

இதனைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழ் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி  வைரலாகும் நியூஸ்கார்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய நியூஸ் 7 தமிழன் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். இதில் நியூஸ் 7 தமிழ் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவர் சுகிதா சாரங்கராஜைத் தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். இதற்கு அவர், ”இது பொய்யான நியூஸ்கார்ட், இதை நாங்கள் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழின் சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

Archive Link

மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்ளை என் தோளிலா கொண்டு வர முடியும் நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது உறுதியாகின்றது.

Also Read: உக்ரைன் தலைநகரில் பாராஷூட் மூலம் குதித்து தாக்குதல் நடத்தும் ரஷ்ய வீரர்கள் எனப்பரவும் பழைய வீடியோ!

Conclusion

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை என் தோளிலா கொண்டு வர முடியும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்டுகள் பொய்யான்வையாகும்.

இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

Nirmala Seetharaman

Puthiya Thalaimurai

News 7 Tamil

Sugitha sarangaraj, News 7 Tamil


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular