Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: உத்திரப்பிரதேசத்தில் வயதான முதியவரை கடுமையாக தாக்கும் யோகியின் போலீஸ் என்று பரவும் வீடியோ.
Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் 2022 ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் நடந்ததாகும்.
உத்திரப்பிரதேசத்தில் வயதான முதியவரை கடுமையாக தாக்கும் யோகியின் போலீஸ் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: பாஜக நிர்வாகி தேடப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்டு!
உத்திரப்பிரதேசத்தில் வயதான முதியவரை கடுமையாக தாக்கும் யோகியின் போலீஸ் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
உத்திரப்பிரதேசத்தில் வயதான முதியவரை கடுமையாக தாக்கும் யோகியின் போலீஸ் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இத்தேடலில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் இச்சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் நடந்ததாக ஏசியாநெட் நியூஸ் தமிழ் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. இச்செய்தியானது ஜூலை 29, 2022 அன்று வெளிவந்திருந்தது.
தொடர்ந்து தேடுகையில் தந்தி தொலைக்காட்சியிலும் இச்சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்ததாக கூறி செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
இதனைடுத்து தேடுகையில் மேலும் சில ஊடகங்களும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்திகளிலும் இச்சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் அதிமுக நிர்வாகி தேடப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்டு!
உத்திரப்பிரதேசத்தில் வயதான முதியவரை கடுமையாக தாக்கும் யோகியின் போலீஸ் என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் 2022 ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் நடந்ததாகும். இச்சம்பவத்திற்கும் யோகி ஆதித்யநாத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from Asianet News Tamil, Dated July 29, 2022
Report from Thanthi TV, Dated July 30, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)