வியாழக்கிழமை, செப்டம்பர் 26, 2024
வியாழக்கிழமை, செப்டம்பர் 26, 2024

HomeFact Checkஉத்திரபிரதேசத்தில் கத்தியை காட்டி மிரட்டிய நபரை கைது செய்ய காவல்துறை செய்த செயல் என்று பரவும்...

உத்திரபிரதேசத்தில் கத்தியை காட்டி மிரட்டிய நபரை கைது செய்ய காவல்துறை செய்த செயல் என்று பரவும் கர்நாடகா வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: உத்திரபிரதேசத்தில் கத்தியைக் காட்டி மக்களை மிரட்டிய நபர்
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ கர்நாடகா கலபுரகியில் எடுக்கப்பட்டதாகும்.

உத்திரபிரதேசத்தில் கத்தியை காட்டி மிரட்டிய நபரை சுட்டுப்பிடித்த காவல்துறை என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”உத்திரபிரதேசம் மாநிலம் சாஹரன்பூர் நகரின் சண்டே மார்க்கெட்டில் அந்த ஊரைச் சேர்ந்த ரவுடி அப்துல் கஃபார் என்பவன் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி கொண்டிருந்த பொழுது, உத்திரபிரதேச போலீஸ் எடுத்த செல்லமான நடவடிக்கை” என்று இந்த வீடியோ பரவுகிறது.

Screenshot from X @Murugan3476

X Link/Archived Link

Screenshot from X @TK_TUTICORIN

X Link/Archived Link

Screenshot from X @saiko58791481

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.  

Also Read: சந்திரபாபு நாயுடு NDA கூட்டணியில் இருந்து விலகுவதாகப் பரவும் 2018ஆம் ஆண்டு செய்தி!

Fact Check/Verification

உத்திரபிரதேசத்தில் கத்தியை காட்டி மிரட்டிய நபரை கைது செய்ய காவல்துறை செய்த செயல் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த பிப்ரவரி 06, 2023 அன்று CNN- நியூஸ் 18  வெளியிட்டிருந்த செய்தியில் கர்நாடகா மாநிலம் கலபுரகியில் கத்தியைக் காட்டி மிரட்டிய நபரை சுட்டுப் பிடித்த காவல்துறை என்று வீடியோவுடன் செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து India Today வெளியிட்டுள்ள செய்தியில் பைசல் பகவான் என்கிற இந்த நபர் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய நிலையில் மக்களை பாதுகாக்க குறிப்பிட்ட நபரை காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர் என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரிடம் விசாரணை நடைபெற்றதாகவும் செய்தி இடம்பெற்றுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இச்சம்பவமே உத்திரபிரதேசத்தில் நடைபெற்றதாகப் பரவி வருகிறது.

 Also Read: திமுக ஆட்சியில் மாணவிகள் பள்ளியில் மது அருந்தியதாக பரவும் பழைய வீடியோ!

Conclusion

உத்திரபிரதேசத்தில் கத்தியை காட்டி மிரட்டிய நபரை கைது செய்ய காவல்துறை செய்த செயல் என்று பரவும் வீடியோ கர்நாடகாவைச் சேர்ந்தது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Report from India Today, Dated February 06, 2023
YouTube Video from CNN-News 18, Dated February 06, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular