சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeFact Checkஒரு வார்டில் தோற்றாலும் பதவியை ராஜினாமா செய்வேன் என்றாரா வானதி சீனிவாசன்?

ஒரு வார்டில் தோற்றாலும் பதவியை ராஜினாமா செய்வேன் என்றாரா வானதி சீனிவாசன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வார்டில் பாஜக தோற்றாலும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று வானதி சீனிவாசன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வார்டில் பாஜக தோற்றாலும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் ஹெல்ப்லைன் எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு பயனர் ஒருவர் நியூஸ்கார்ட் ஒன்றை பகிர்ந்து, அதன் உண்மைத்தன்மை குறித்து நம்மிடம் கேட்டிருந்தார்.

அவர் பகிர்ந்த நியூஸ்கார்டில், “கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து உள்ளாட்சி வார்டுகளிலும் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற செய்வேன். ஒரு வார்டில் தோற்றால் கூட தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன்”  என்று கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் மேற்கண்ட நியூஸ்கார்ட் குறித்து தேடும்போது பலரும் இந்த நியூஸ்கார்டை பகிர்ந்து வருவது தெரிய வந்தது.

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வார்டில் பாஜக தோற்றாலும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 1

Twitter Link | Archive Link

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வார்டில் பாஜக தோற்றாலும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வார்டில் பாஜக தோற்றாலும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

Also Readகூட்டுறவு வங்கிக்கடன் நகைகள் ஏலம் என்று அறிவித்தாரா அமைச்சர் ஐ.பெரியசாமி?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வார்டில் பாஜக தோற்றாலும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று வானதி சீனிவாசன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால் இந்த நியூஸ்கார்டை புதிய தலைமுறை வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இதில் புதிய தலைமுறை இவ்வாறு  நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை.  

இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் பொறுப்பாளரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டதற்கு, இது பொய்யான நியூஸ்கார்ட். இதை நாங்கள் வெளியிடவில்லை என பதிலளித்தனர்.

இதனையடுத்து வானதி சீனிவாசன் அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். இதற்கு அவர்,

“இது பொய்யான செய்தி. இவ்வாறு நான் பேசவில்லை.”

என்று பதிலளித்தார்.

Also Read: மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோயின் கதை என்று வைரலாகும் பதிவின் உண்மை பின்னணி!

Conclusion

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வார்டில் பாஜக தோற்றாலும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் முற்றிலும் பொய்யானதாகும்.

இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

Vanathi Srinivasan’s Testimonial

Puthiya Thalaimurai Digital Head’s Testimonial


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular