Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: ரயில் விபத்துகளை தடுப்பதற்கு ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்
Fact: இத்தகவல் பொய்யானது என்று வானதி சீனிவாசன் தெளிவு செய்துள்ளார்.
ஒடிசாவில் நடந்துள்ள ரயில் விபத்தானது நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.
இந்நிலையில், “இனி வரும் காலங்களில் இது போன்ற ரயில் விபத்துகளை தடுப்பதற்கு ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது தான் சிறந்த முடிவாகும்” என்று பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாக நியூஸ் நவ் 4 தமிழ் எனும் சமூக ஊடகப் பக்கத்தில் தகவல் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
இத்தகவலை பலரும் அவர்களது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்து, இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ‘நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று அண்ணாமலைக்கு கிண்டலாக பதிலளித்தாரா ரவீந்திர ஜடேஜா?
ரயில் விபத்துகளை தடுப்பதற்கு ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து, இக்கருத்தை வானதி சீனிவாசன் எங்கேயாவது தெரிவித்துள்ளாரா என்று உறுதி அவரது சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் பொது ஊடகத்திலும் ஆராய்ந்தோம்.
இதில் ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வானதி சீனிவாசன் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
இதை தவிர்த்து ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வானதி பேசியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து வானதி சீனிவாசனத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என தெரிவித்தார்.
தொடர்ந்து இத்தகவல் பொய்யானது என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.
Also Read: ஹேர் டிரையர் மற்றும் அயர்ன் பாக்ஸ் மூலமாக காய வைக்கப்பட்டதா அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்?
ரயில் விபத்துகளை தடுப்பதற்கு ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் தகவல் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Tweet from Vanathi Srinivasan, President, BJP Mahila Morcha, Dated June 05, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 25, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 24, 2025
Ramkumar Kaliamurthy
June 4, 2025