Monday, December 22, 2025

Fact Check

வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்றாரா பொன்முடி?

banner_image

Claim: வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்றார் பொன்முடி

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான தர்மா ராஜா திரெளபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்களை சாமி கும்பட அனுமதிக்காத விவகாரத்தில் அக்கோயிலுக்கு அரசு தரப்பில் சீல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூரிலும் இதேபோன்று ஒரு சம்பவம் நடக்க அங்குள்ள காளியமான் கோயிலுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “பட்டியல் சமூக மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள்!” என்று அமைச்சர் பொன்முடி பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்று அமைச்சர் பொன்முடி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Twitter@KavinSolaimalai

Twitter Link | Archived Link

வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்று அமைச்சர் பொன்முடி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/Poopathi Poopathi

Archived Link

வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்று அமைச்சர் பொன்முடி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/Vadachennai Parthiban

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பத்திரிக்கையாளர்களுக்கு பயந்து ஓடிய பாஜக அமைச்சர் மீனாட்சி லேகியின் நடனம் என்று பரவும் பொய் வீடியோ!

Fact Check/Verification

வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்று அமைச்சர் பொன்முடி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

இதில் இத்தகவல் பொய்யானது என்றும், இத்தகவலை பரப்பிய கலிய பெருமாள் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாக தந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்று அமைச்சர் பொன்முடி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Thanthi TV

இதையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள 10 ஜூன், 2023 அன்று இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

மாறாக இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று தந்தி தொலைக்காட்சி தரப்பில் மறுப்பு தெரிவித்திருப்பதை நம்மால் காண முடிந்தது.

தொடர்ந்து தேடியதில்  “கலை – அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் 22ம் தேதி வரை நீட்டிப்பு. ஞாயிற்றுக்கிழமைகளிலும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்” என்று அமைச்சர் பொன்முடி கூறியதாக மே 19, 2023 அன்று தந்தி தொலைக்காட்சி நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: யானைக்கு இறைச்சி தந்த முஸ்லீம் நபரை யானை தாக்கியதா?

Conclusion

வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்று அமைச்சர் பொன்முடி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Report from Thanthi Tv, Dated May 19, 2023

Report from Thanthi Tv, Dated June 11, 2023
Report from Thanthi Tv, Dated June 11, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,658

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage