செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16, 2024

HomeFact Checkதெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறும்போது நான் கூடாதா என்றாரா பிரகாஷ்...

தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறும்போது நான் கூடாதா என்றாரா பிரகாஷ் ராஜ்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறும்போது நான் தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில்  நான் போட்டியிடக் கூடாதா என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறும்போது நான் கூடாதா என்Ru பிரகாஷ் ராஜ் கூறியதாக வந்தச் செய்தி

இயக்குனர் இமயம் கே.பாலசந்தர் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழ் தவிர்த்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகின்றார்.

இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெங்களூரில் பிறந்தவர். இவர் வரவிருக்கும் தெலுங்கு நடிகர் சங்கமான ‘மா’ (MAA-Movie Artists Associations)-வில் தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கின்றார்.

பிறப்பால் கன்னடரான இவர், எவ்வாறு தெலுங்கு நடிகர் சங்கத்தில் போட்டியிட முடியும் எனும் சர்ச்சை சமீபத்தில் வெடித்தது. இதற்கு தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறும்போது நான் தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில்  நான் போட்டியிடக் கூடாதா என்று பிரகாஷ் ராஜ் கூறியதாக‘கதிர்’ எனும் ஆன்லைன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியினை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து, இதுக்குறித்த தங்கள் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.

தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறும்போது நான் கூடாதா என்Ru பிரகாஷ் ராஜ் கூறியதாக வந்தச் செய்தி குறித்த பதிவு - 1

Archive

தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறும்போது நான் கூடாதா என்Ru பிரகாஷ் ராஜ் கூறியதாக வந்தச் செய்தி குறித்த பதிவு - 2

Archive

தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறும்போது நான் கூடாதா என்Ru பிரகாஷ் ராஜ் கூறியதாக வந்தச் செய்தி குறித்த பதிவு - 3

Archive

Also Read: சீமான், பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலி சமூக வலைத்தள கணக்குகள் குறித்த செய்திக்கு பயன்படுத்தப்பட்டதா?

Fact Check/Verification

நடிகர் பிரகாஷ்ராஜும் விஷாலும் நல்ல இணக்கத்தில் இருப்பவர்கள்.  விஷால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவராக நின்றபோது அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் பிரகாஷ்ராஜும் ஒருவர்.

இவ்வாறு இருக்க பிரகாஷ்ராஜ் விஷால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவரின் பூர்விகம் குறித்து பேசியிருப்பாரா எனும் சந்தேகம் நமக்கு ஏற்பட்டது. எனவே இதன் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மையை அறிய முடிவு செய்து இதுக்குறித்து தேடினோம்.

நம் தேடலில் பிரகாஷ்ராஜ் அவர்கள் கடந்த வெள்ளியன்று (25/06/2021) பத்திரிக்கையாளர்களை சந்தித்தையும், இந்த சந்திப்பில் இன பேதம் குறித்த சர்ச்சைகளுக்கு அவர் பதிலளித்திருந்ததையும் காண முடிந்தது.

இன பேதம்   குறித்து பிரகாஷ் ராஜ் பேசியதாவது:-

சினிமா என்பதே ஒரு மொழி. நடிகர்கள் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உரியவர்கள் அல்ல, நடிகர்கள் என்பவர்கள் பொதுப்படையானவர்கள்.

போன தேர்தலில் இந்த இனபேதம் கருத்து வரவில்லையே, இப்பொழுது மட்டும் ஏன் வருகின்றது? இதன் நோக்கம் என்ன? என நீங்கள் கேள்வி கேட்க வேண்டுமல்லவா?

என் பணியாளர்களுக்கு வீடு கட்டி தரும்போது இந்த இனபேதம் வரவில்லை, இங்கு இரண்டு கிராமங்களை தத்தெடுக்கும்போது இந்த இனபேதம் வரவில்லை, 9 நந்தி விருது வாங்கும்போதும் வரவில்லை, ஒரு தேசிய வாங்கும்போதும் வரவில்லை, இப்போது திடீரென்று இந்த இனபேதம் எங்கிருந்து வந்தது? இது மிகவும் பின்தங்கிய மனநிலை.

நடிகர்கள் அப்படி இல்லை. சாய்குமார், ஜெய்சுதா போன்றோரை பல மொழிகளில் ஆராதித்து வருகின்றனர். அவர்களிடம் யாரும் இனபேதம் பார்ப்பதில்லை. அவர்கள் தெலுங்கு மக்களின் பெருமை, நடிகர்கள் என்பவர்கள் ஒரு அடையாளம்.

‘மா’ என்பது ஒரு வலிமையான சங்கம். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு நம் சங்கத்தை சேர்ந்தவர் செல்லும்போது, அங்குள்ள தெலுங்கர்கள் நம் மக்கள் வருகின்றனர் என வரவேற்கின்றனர். அதுவே நமது பெருமை.

ஆனால் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எந்த ஒரு இடத்திலும் விஷால் குறித்தோ, அவரின் இனம் குறித்தோ பிரகாஷ்ராஜ் பேசி இருக்கவில்லை.

ஒருவேளை வேறு இடத்தில் வேறு ஒரு சந்தர்பத்தில் இவ்வாறு பேசியுள்ளாரா என்பதை தேடினோம். ஆனால் இவ்வாறு அவர் பேசியதாக எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை.

மேற்குறிப்பிட்ட பத்திரிக்கைச் சந்திப்பானது பிரகாஷ்ராஜ் அணி குறித்து மற்ற அணி பேசிய கருத்துக்கு பதிலளிக்கவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  மேலும் இந்த சந்திப்பில், தேர்தல் முடியும் வரை எந்த ஊடகத்திற்கும் தேர்தல் குறித்து எங்கள் அணியிலிருப்பவர் எந்த ஒரு பேட்டியும் தரப்போவதில்லை எனும் முடிவெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி பார்க்கையில் விஷால் குறித்து எந்த ஒரு நிகழ்விலும் பிரகாஷ்ராஜ் பேசியிருக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகின்றது.

இத்தகவலை மேலும் உறுதிப்படுத்த பிரகாஷ் ராஜ் அவர்களை தொடர்புக்கொண்டு இதுக்குறித்துக் கேட்டோம். அவரும் ”நான் இவ்வாறு பேசவில்லை” என்று நமக்கு பதிலளித்தார்.

Also Read: உலகிலேயே அதிக அளவு கொரோனா தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டுள்ளதா?

Conclusion

தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறும்போது நான் தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில்  நான் போட்டியிடக் கூடாதா என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியதாக  வந்தச் செய்தி தவறானதாகும்.

இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Actor Prakash Raj:-

Filmy Focus: https://www.youtube.com/watch?v=Oek_SHuE30w


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular