Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

கிராம்பு, கற்பூரம், ஓமம், நீலகிரி தைலம் ஆகியவை இணைந்து அவசர நேர ஆக்ஸிஜனுக்கு உதவுகின்றனவா?
கிராம்பு, கற்பூரம், ஓமம் மற்றும் நீலகிரி தைலம் அடங்கிய சிறு மூட்டைகள் மூலம் உடல் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க முடியும் என்று பரவும் தகவல் ஆதாரமற்றது.

கும்பமேளாவைக் கண்டித்த பெண் பத்திரிக்கையாளர் கொலை செய்யப்பட்டாரா?
கும்பமேளாவைக் கண்டித்து கேள்வி எழுப்பிய் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் நடுவீதியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாகப் பரவும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தவறானதாகும்.

இறந்த மனைவியின் உடலை மூட்டைக் கட்டி தூக்கி செல்லும் அப்பாவும் மகனும்; உத்திரப் பிரதேசத்தில் நடந்ததா?
உத்திரப் பிரதேசத்தில் ஆம்புலன்சிற்கு கொடுக்க பணம் இல்லாததால் இறந்த மனைவியின் உடலை அப்பாவும் மகனும் மூட்டைக் கட்டித் தூக்கி சென்றதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

வங்க தேசத்தில் எடுக்கப்பட்ட படம், குஜராத்தில் எடுக்கப்பட்டதாக வதந்தி
குஜராத்தில் ஆக்சிஜன் சிலிண்டருடன் நோயாளி ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

குஜராத்தில் எடுக்கப்பட்ட படமா இது?
குஜராத்தில் ஆக்சிஜன் சிலிண்டருடன் மூதாட்டி ஒருவர் வெட்ட வெளியில் உட்கார்ந்திருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)