Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:-
நூறு வருடங்களுக்கு முந்தைய காலண்டர் இந்த மாத காலண்டர் ஒன்றாக இருப்பது மிகப்பெரிய அதிசயம் என்று பரவும் புகைப்படத் தகவல் புரிதலின்றி பரவுகிறது.
சுதந்திர தினத்தின் போது முதலமைச்சர் ஆற்றும் உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர நாள் ஜனவரி 15 என்று குறிப்பிட்டார் என்பதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.
ஆரஞ்சு மரக்கன்றுக்கு பதிலாக அமைச்சர் மனோ தங்கராஜ் தென்னங்கன்றை நட்டதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.
புதிதாக பணியமர்த்தப்பட்ட அர்ச்சகர் ஒருவர் சாமி சிலையின் மேல் ஏறி நின்றதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் அப்படம் பழைய படமாகும்.
800 இந்தியர்களை ஒரே விமானத்தில் அழைத்து வந்த இந்திய ராணுவம் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. வைரலாகும் படம் 8 ஆண்டுக்களுக்கு முந்தைய பழைய படமாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)