இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:-

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றாரா பிரியா மாலிக்?
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரியா மாலிக் தங்கம் வென்றதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பிரியா மாலிக் என்று பகிரப்படும் மற்ற வீராங்கனைகளின் புகைப்படங்கள்!
உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பிரியா மாலிக் அவர்களின் புகைப்படம் என்று வேறு சில வீராங்கனைகளின் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ரங்கராஜ் பாண்டே சிறுவயதில் ஆர்.எஸ்.எஸ். சீருடையுடன் இருப்பதாக வதந்தி
ரங்கராஜ் பாண்டே அவர்கள் சிறுவயதில் ஆர்.எஸ்.எஸ். சீருடையுடன் கையில் கைத்துப்பாக்கியுடன் இருப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஆனால் அப்படம் அவருடையதல்ல.

இந்தியாவில் முதன்முதலில் கட்சிசார் இளைஞர் அணியைத் தொடங்கியது திமுகவா?
இந்தியாவில் முதன்முறையாக கட்சி சார்ந்த இளைஞர் அணியை அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்று பரவுகின்ற தகவல் தவறானதாகும்.

திருப்பதி ஏழுமலையானுக்கு அபிஷேக பால் கொடுக்கும் புங்கநூர் பசுவா இது?
திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் 100 லிட்டர் அபிஷேகப் பால் கொடுக்கும் விலையுயர்ந்த புங்கநூர் பசு என்று பரவுகின்ற புகைப்படத்தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)