இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:-

கொங்கு நாடு உருவாக்கப்பட உள்ளதாக தகவல்; வைரலாகும் புதிய தலைமுறை நியூஸ்கார்ட் உண்மையானதா?
கொங்கு நாடு எனும் புதிய மாநிலம் உருவாகவிருக்கின்றது என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் அந்த நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவித்ததா?
குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என்று தமிழக அரசு அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

உருமாறும் வைரஸ்களுக்கு உருவகமாக பிரதமர் மோடியின் படங்களை பயன்படுத்தியதா சன் நியூஸ்?
உருமாறும் வைரஸ்களுக்கு உருவகமாக பிரதமர் மோடியின் படங்களை சன் நியூஸ் பயன்படுத்தியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஆனால் அந்த நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

வலிமை படம் பார்க்க சென்னைக்கு வருவேன் என்று கூறினாரா புருநே நாட்டு இளவரசி?
வலிமை திரைப்படத்தைப் பார்க்க சென்னைக்கு வருவேன் என்று புருநே நாட்டு இளவரசி கூறியதாகப் பரவும் புகைப்படத்தகவல் போலியானதாகும்.

துபாயில் இஸ்லாமியப் பெண்கள் மசூதியில் ராம பஜனை பாடினார்களா?
துபாயில் இஸ்லாமியப் பெண்கள், அங்குள்ள மசூதி ஒன்றில் ராம பஜனை பாடியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.ஆனால் இது தவறானத் தகவலாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)