Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
பிரதமர் மோடியின் 1983ஆம் ஆண்டு MA டிகிரியில் 1981ஆம் ஆண்டே இறந்த குஜராத் பல்கலை துணை வேந்தர் கையெழுத்திட்டதாகப் பரவுகின்ற செய்தி போலியானதாகும்.
நடிகர் சூர்யா மும்பையில் வாங்கியுள்ள வீடு என்று பரவும் புகைப்படச்செய்தி தவறானதாகும்.
கலாசேத்ரா போன்ற இந்து நிறுவனங்களில் பாலியல் குற்றம் நடந்தால் கண்டுக்கொள்ளக் கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் தகவல் பொய்யானதாகும்.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணையில் பாஜக நிர்வாகி அலெக்ஸ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகவும், அமர் பிரசாத் ரெட்டியை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன அனுப்பியதாகவும் பரவும் தகவல் பொய்யானதாகும்.
அமைச்சர் அன்பில் மகேஷ் சொத்து விவரத்தை பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை வெளியிட வேண்டும் என்று மாணவி ஒருவர் பதாகை பிடித்ததாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 8, 2025
Vijayalakshmi Balasubramaniyan
February 1, 2025
Vijayalakshmi Balasubramaniyan
January 25, 2025