சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeFact CheckFact Check: பிரதமர் மோடியின் 1983ஆம் வருட MA டிகிரியில் 1981ல் இறந்த துணை வேந்தர்...

Fact Check: பிரதமர் மோடியின் 1983ஆம் வருட MA டிகிரியில் 1981ல் இறந்த துணை வேந்தர் கையெழுத்திட்டாரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: 81 இல் இறந்த சாஸ்திரி மீண்டும் மோடிக்காக உயிருடன் 83 இல் வந்து கை எழுத்து போட்டு தந்த தருணம்.
Fact: இத்தகவல் தவறானதாகும். கே.எஸ்.சாஸ்திரி 81 முதல் 87 வரை குஜராத் பல்கலையில் துணைவேந்தராக இருந்துள்ளார்.

பிரதமர் மோடியின் 1983ஆம் ஆண்டு MA டிகிரியில் அதற்கு முன்பாக 1981ஆம் ஆண்டு இறந்த குஜராத் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கையெழுத்திட்டதாகப் புகைப்படச்செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

”81 இல் இறந்த சாஸ்திரி மீண்டும் மோடிக்காக உயிருடன் 83 இல் வந்து கை எழுத்து போட்டு தந்த தருணம். ” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

Screengrab from Twitter/@ArasiyalKadai
Screengrab from Facebook/Kottur.Mahesh
Screengrab from Facebook/natrajan.v.98

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கர்நாடகாவில் இஸ்லாமிய தோற்றத்தில் மோடி மற்றும் அமித்ஷா என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

Factcheck / Verification

பிரதமர் மோடியின் 1983ஆம் ஆண்டு MA டிகிரியில் 1981ஆம் ஆண்டே இறந்த குஜராத் பல்கலை துணை வேந்தர் கையெழுத்திட்டதாகப் பரவுகின்ற செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட வைரல் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் கே.எஸ்.சாஸ்திரி பெயரில் தேடியபோது வீர் நர்மத் சவுத் குஜராத் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கம் நமக்குக் கிடைத்தது.

வைரலாகும் பதிவில் இடம்பெற்றுள்ள துணைவேந்தர் கே.எஸ்.சாஸ்திரியின் புகைப்படம் அந்த இணையதளத்தில் உள்ள பதவியில் இருந்த துணைவேந்தர்கள் என்னும் பிரிவில் உள்ளது. அதில், அவர் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் சூரத் பிரிவில் 1980 முதல் 1981 வரையில் துணைவேந்தராக இருந்துள்ளார் என்பதும், அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் அல்ல என்பதும் உறுதியாகியது.

தொடர்ந்து, குஜராத் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பட்டியலை கூகுளில் தேடியபோது குஜராத் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பிடிஎஃப் ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில், 1981 முதல் 1987 வரையில் குஜராத் பல்கலைக்கழகத்தில் கே.எஸ்.சாஸ்திரி துணை வேந்தராக பணியில் இருந்துள்ளார் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

SLFRFன் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் பேராசிரியர் கே.எஸ்.சாஸ்திரி குஜராத் பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றியதை உறுதி செய்கிறது.

இதன்மூலம், 1981ல் குஜராத் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்ற ஆரம்பித்த கே.எஸ்.சாஸ்திரி அங்கு 1987 வரையில் பணியாற்றியுள்ளார் என்பதும், 1983ஆம் ஆண்டு, பிரதமர் மோடியின் டிகிரி அளிக்கப்பட்ட ஆண்டிலும் அவர் அங்கே பணியாற்றியுள்ளார் என்பதும் உறுதியாகிறது. அவர் 1981ல் இறந்துவிட்டார் என்பதும் தவறானது. இந்த கட்டுரையை Newschecker ஆங்கில இணையதளத்திலும் வெளியிட்டுள்ளோம்.

Also Read: நடிகர் சூர்யா மும்பையில் வாங்கியுள்ள வீடு என்று பரவும் தவறான புகைப்படம்!

Conclusion

பிரதமர் மோடியின் 1983ஆம் ஆண்டு MA டிகிரியில் 1981ஆம் ஆண்டு இறந்த குஜராத் பல்கலை துணை வேந்தர் கையெழுத்திட்டதாகப் பரவுகின்ற செய்தி போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Official Website Of Veer Narmad South Gujarat University
Official Website Of Gujarat University
Official Website Of SLERF


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular