உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலை சென்னையில் வைக்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தவெக மதுரை மாநாட்டின் கார் பார்க்கிங்கில் குவிந்திருந்த வாகனங்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலை சென்னையில் வைக்கப்பட்டுள்ளதாக பரவும் வீடியோவில் ‘HooHooCreations80’ எனும் வாட்டர்மார்க் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

இதை அடிப்படையாக வைத்து தேடியதில் ‘HooHooCreations80’ என்கிற யூடியூப் பக்கத்தில் வைரலாகும் இவ்வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இப்பக்கத்தின் சுயவிவரக் குறிப்பில் பொழுதுப்போக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழிற்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து Hive Moderation, WasItAI உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அறியும் இணையத்தளங்கள் வழியாக வைரலாகும் வீடியோவை பரிசோதித்தோம். அதில் வைரலாகும் வீடியோ செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ என பதில் வந்தது.


கிடைத்த ஆதாரங்களின்படி வைரலாகும் வீடியோ செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டது என தெளிவாகின்றது.
Also Read: தவெக தலைவர் விஜய் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வாங்கிய கேரவன் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Conclusion
உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலை சென்னையில் வைக்கப்பட்டுள்ளதாக பரவும் வீடியோ செயற்கை நுண்ணறிவு (AI) தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video by HooHooCreations80, dated August 23, 2025
Hive Moderation Website
WasItAI Website
இத்தகவலானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே ஃபேக்ட் செக் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்டுரையை இங்கே படிக்கலாம்.