Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: உத்திரப்பிரதேசத்தில் பெண்ணை பைக்கில் இடித்துவிட்டு தப்பியோடிய மூவரின் கால்களை உடைத்தார் யோகி ஆதித்யநாத்.
Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படுபவர்கள் ராஜஸ்தானின் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடையவர்களாவர். வைரலாகும் வீடியோவுக்கும் யோகி ஆதித்யாத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை.
“செகாப், அப்சல் மற்றும் ஃபைசல் மூவரும் உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண்ணை பைக்கில் இடித்து விட்டு தப்பிச்சென்றனர். 24 மணிநேரத்தில் அவர்களை மடக்கிய காவல்துறையினர். புல்லட்டை விட்டு அம்மூவரின் ஏற்றி கால்களை உடைக்க சொன்ன யோகி ஜீ. மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு வீல் சேர்கூட வழங்கவில்லை” என்று குறிப்பிட்டுவீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உத்திரப்பிரதேசத்தில் பெண்ணை பைக்கில் இடித்துவிட்டு தப்பியோடிய மூவரின் கால்களை யோகி ஆதித்யநாத் உடைக்கக்கூறியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அத்தகவல் குறித்து ஆராய்ந்தோம்.
அதில் ராஜஸ்தானில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் காலில் அடிப்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோ ஃபர்ஸ்ட் இந்தியா நியூஸ் எனும் யூடியூப் பக்கத்தில் செப்டம்பர் 18, 2023 அன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் இதுக்குறித்த செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. இச்செய்தியில் போலீசாருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் குற்றவாளிகளுக்கு காலில் குண்டடிப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோவுக்கும் யோகி ஆதித்யநாத்துக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகின்றது.
இதனையடுத்து வைரலாகும் வீடியோத்தகவலில் குறிப்பிட்டதுபோல் உத்திரப்பிரதேசத்தில் சம்பவம் ஏதேனும் நடந்துள்ளதா எனத் தேடினோம். அதில் உத்திரப்பிரதேசத்தின் அம்பேத்கர் நகரில் இதுப்போன்று ஒரு சம்பவம் நடந்துள்ளதை அறிய முடிந்தது. இதுக்குறித்த செய்தி இந்தியா டுடேவில் செப்டம்பர் 17, 2023 அன்று வெளிவந்திருந்தது.
சைக்கிளில் சென்ற 17 வயது இளம்பெண்ணின் துப்பட்டாவை மூன்று இளைஞர்கள் பிடித்து இழுத்துள்ளனர். இதன் காரணமாக அப்பெண் உயிரிழந்துள்ளார். இக்குற்ற செயலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களில் இருவர் போலீசாரிடமிருந்து தப்பித்துச் செல்ல முயன்றபோது காலில் சுடப்பட்டதாகவும் மற்றொருவருக்கு ஓடும்போது காலில் முறிவு ஏற்பட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் இந்தியா டாட் காம் இணையத்தளத்திலும் இதுக்குறித்த செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியிலும் இதே தகவலே தெரிவிக்கப்பட்டிருந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் தெளிவாகுவது யாதெனில், உ.பி.யில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட மூன்று இளைஞர்களின் கால் உடைக்கப்பட்டது எனும் தகவல் உண்மையே. ஆனால் அத்தகவலுடன் பகிரப்பட்ட வீடியோ தவறானதாகும்.
Also Read: அமெரிக்க டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் இடம்பெற்ற முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
உத்திரப்பிரதேசத்தில் பெண்ணை பைக்கில் இடித்துவிட்டு தப்பியோடிய மூவரின் கால்களை யோகி ஆதித்யநாத் உடைக்கக் கூறியதாக பரவும் வீடியோத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் உண்மையே. அவ்வாறு ஒரு சம்பவம் உ.பி.யில் நடந்துள்ளது. ஆனால் இச்செய்தியுடன் பகிரப்பட்டும் வீடியோவுக்கும் அச்சம்பவத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை. உண்மையில் அவ்வீடியோவில் காலுடைந்து காணப்படுபவர்கள் ராஜஸ்தானில் கொலை வழக்கில் தொடர்புடையவர்களாவர்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from First India News, Dated September 18, 2023
Report from Times of India, Dated September 07, 2023
Report from India Today, Dated September 17, 2023
Report from India.com, Dated September 17, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 18, 2025
Ramkumar Kaliamurthy
May 5, 2025
Ramkumar Kaliamurthy
December 18, 2024