பசுஞ்சாண வறட்டியை எரித்து கொரோனாவை குணப்படுத்தலாம் என்று உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பசுஞ்சாண வறட்டியை எரித்தால் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இதனைப் பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.



Also Read: மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை என்றாரா உதயநிதி ஸ்டாலின்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
பசுஞ்சாண வறட்டியை எரித்து கொரோனாவை குணப்படுத்தலாம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டதா என அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
“உத்தரபிரதேசத்தில் 2017ல் இருந்து கலவரங்கள் எதுவும் நடைபெறவில்லை” என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக தந்தி தொலைக்காட்சி நியூஸ்கார்ட் ஒன்றை கடந்த ஞாயிறன்று வெளியிட்டிருந்தது. அந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


மேலும் தந்தி தொலைக்காட்சியே வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தெரிவித்துள்ளதை நம்மால் காண முடிந்தது.
இதனையடுத்து யோகி ஆதித்யநாத் மேற்காணும் கூற்றை எந்த தருணத்திலாவது பேசியுள்ளாரா என்பதை தேடினோம். இந்த தேடலில் யோகி ஆதித்யநாத் யோகா மூலம் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று பேசியுள்ளார் என அறிய முடிந்தது. இதுக்குறித்து ஊடகங்களிலும் செய்தி வந்துள்ளது. அவற்றை இங்கே, மற்றும் இங்கே படிக்கலாம்.
ஆனால் பசுஞ்சாணத்தால் கொரானாவை குணப்படுத்த முடியும் என்று யோகி பேசியதாக எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை. மாறாக அசாம் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பேசியாத தகவல் கிடைத்தது. அதுகுறித்த ஊடக செய்திகளை இங்கே, மற்றும் இங்கே படிக்கலாம்.
Also Read: தமிழகத்தில் ஒமிக்ரான் காரணமாக 2 மாதங்கள் முழு ஊரடங்கா?
Conclusion
பசுஞ்சாண வறட்டியை எரித்து கொரோனாவை குணப்படுத்தலாம் என்று உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)