Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தமிழகத்தில் ஒமிக்ரான் காரணமாக 2 மாதங்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வருகின்றது. இதனால் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் கர்நாடகா போன்ற மாநிலங்களில் வார இறுதி ஊரடங்கு அறிவிக்கப்ப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஜனவரி 20 முதல் மார்ச் 20 வரை இரண்டு மாதங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஊரடங்கை மீறுபவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும் என்றும் தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Also Read: மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை என்றாரா உதயநிதி ஸ்டாலின்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தமிழகத்தில் ஒமிக்ரான் காரணமாக 2 மாதங்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக வைரலாகும் நியூஸ்கார்டில், ‘அபராதம்’ எனும் சொல் ’அவதாரம்’ என்றும், ‘சுற்றுபவர்கள்’ எனும் சொல் ‘சுற்றுப் அவர்களுக்கு’ என்றும் எழுத்துப்பிழைகளுடன் எழுதப்பட்டிருந்தது.
இதிலிருந்தே இந்த நியூஸ்கார்ட் போலியானதுதான் என்பதை நம்மால் யூகிக்க முடிந்தது. இருப்பினும் இந்த நியூஸ்கார்டை பலர் உண்மை என்று எண்ணி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதால் இதை முறையாக ஆய்வு செய்து விளக்க முடிவு செய்தோம்.
முதலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டதா என அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு உறுதியானது. தந்தி தொலைக்காட்சியே வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தெரிவித்து இருந்தது.
இதனையடுத்து ஒமிக்ரான் காரணமாக தமிழக அரசு சார்பில் ஏதேனும் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேடினோம்.
இந்த தேடலில் நேற்று( 04/01/2021) தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது எனவும், அதில் நாளை (06/01/2021) முதல் வார நாட்களில் இரவு ஊரடங்கும் (இரவு10 மணி முதல் காலை 5 மணி வரை), வரும் ஞாயிறு (09/01/2021) அன்று முழு ஊரடங்கும் போட முடிவெடுக்கப்பட்டிருந்ததை நம்மால் அறிய முடிந்தது.
Also Read: பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல என்றாரா அண்ணாமலை?
தமிழகத்தில் ஒமிக்ரான் காரணமாக 2 மாதங்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும். இதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Tamilnadu Government Press Release
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 27, 2025