Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறித்து தவறாகப் பேசியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களமானது மிகவும் விருவிருப்பாக காணப்படுகின்றது.
சசிகலா அவர்களின் வருகைக்குப் பின் எந்த மாதிரியான மாற்றங்கள் வரும் என்று மொத்த அரசியல் உலகமே எதிர்பாத்திருந்த நிலையில் “பொது எதிரியான திமுகவை ஆட்சியில் அமர விடக் கூடாது” என்று கூறி அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வமுடன் காத்திருந்த பலருக்கு ஏமாற்றத்தை அளித்து விட்டார்.
இருப்பினும் அவர் அதிமுகவில் மீண்டும் இடம்பெறக் கூடாது என்று அதிமுக தரப்பில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது, கட்சி அலுவலகத்திற்கு வரக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் சசிகலாவையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும்தொடர்பு படுத்தி, அச்சமூகத்தைத் தவறாகப் பேசியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Archive Link: https://archive.vn/TahC3
Archive Link: https://archive.vn/rQ4Bc
இப்புகைப்படச் செய்தியை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிந்து வருவதை நம்மால் காண முடிந்தது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படச் செய்தியின் பின்னணியில் இருக்கும் உண்மைததன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாகப் பேசியதாக பரப்பப்படும் தகவல், நாரதர் மீடியாவின் புகைப்படச் செய்தியின் அடிப்படையிலேயே பரப்பப்படுகின்றது.
ஆகவே இவ்வாறு ஒரு புகைப்படச் செய்தி நாரதர் மீடியாவில் பிரசுரிக்கப்பட்டதா என்பதை அறிய நாரதர் மீடியாவின் சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆய்வு செய்தோம்.
அவ்வாறு ஆய்வு செய்ததில் சி.வி.சண்முகம் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படச் செய்தி முற்றிலும் பொய்யானது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
நாரதர் மீடியாவில்,
“அமைச்சர் கூறியதாக நாரதர் மீடியா logo-வை பயன்படுத்தி போலியாக இந்த செய்தியை சமூக விரோதிகள் சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதற்கும் நாரதர் மீடியாவிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை”
என்று சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திக்கு மறுப்புப் பதிவு பதிவிட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.
அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறித்து தவறாகப் பேசியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படச் செய்தி முற்றிலும் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Facebook Profile: https://www.facebook.com/pandiyan.msb/posts/1775893245915462
Facebook Profile: https://www.facebook.com/muralikrishnan.nallusamy/posts/1886431148176980
Naradhar Media: https://twitter.com/NaratharM/status/1359731507560996868
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
October 14, 2025
Ramkumar Kaliamurthy
September 27, 2025
Vijayalakshmi Balasubramaniyan
August 21, 2025