Fact Check
எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கொடுத்து வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதா?
எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கொடுத்து வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தமிழக காவல்துறை அறிவித்தது என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று (02/05/2021) வெளியிடப்பட்டது. இதில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து அடுத்து ஆட்சி அமைக்க உள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் தொகுதியில் வெற்றிப்பெற்றூள்ளார். இவர் வருகிற மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
இதனிடையே தமிழகத்தின் தற்போதைய முதல்வரான எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கொடுத்து வந்த பாதுகாப்பை திரும்ப பெறுவதாக தமிழக காவல்துறை அறிவித்ததாக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archive Link: https://archive.ph/114cg

Archive Link: https://archive.ph/LVaGM

Archive Link: https://archive.ph/B50Iy
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கொடுத்து வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக பரவும் நியூஸ்கார்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் டிசைனைப் பார்க்கும்போதே, அது போலியாக தயாரிக்கப்பட்டதுதான் என்பதை நம்மால் உணர முடிகின்றது.
ஏனெனில் இந்த நியூஸ்கார்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிரேக்கிங் நியூஸ் டிசைனானது நியூஸ் 7 தமிழில் தற்போதைய காலங்களில் பயன்படுத்தப்படுவதே இல்லை. மேலும் அதிலிருக்கும் எழுத்துருவும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் எழுத்துரு அல்ல.
அதேபோல் இந்த நியூஸ் கார்டில் தேதியும் குறிப்பிடபடவில்லை. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போதே இந்த நியூஸ் கார்டானது பொய்யானதுதான் என்பதை நம்மால் உணர முடிந்தது.
இத்தகவலை உறுதி செய்ய நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இவ்வாறு புகைப்படச் செய்தி பதிவிடப்பட்டுள்ளதா என்பதை தேடினோம்.
இவ்வாறு தேடியதில் வைரலாகும் நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழின் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை.
இதன்பின் வைரலாகும் இச்செய்திக் குறித்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் துறையைத் தொடர்புக் கொண்டு கேட்டோம். அவர்கள்,
“இவ்வாறு ஒரு செய்தியை நாங்கள் வெளியிடவில்லை. இது பொய் செய்தி”
என்று நமக்கு விளக்கமளித்தனர்.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கொடுத்து வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக பரவும் தகவல் பொய்யான ஒன்று என்பது நமக்கு தெளிவாகிறது.
Conclusion
எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கொடுத்து வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்தது என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நியூஸ்கார்டானத் எடிட் செய்யப்பட்டு போலியாக தயாரிக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False/ Fabricated
Our Sources
News 7 Tamil:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)