வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact Checkமெஸ்ஸி விட்டு சென்ற இடம் இன்பநிதிக்கானது என்றாரா ஊடகவியலாளர் செந்தில் வேல்?

மெஸ்ஸி விட்டு சென்ற இடம் இன்பநிதிக்கானது என்றாரா ஊடகவியலாளர் செந்தில் வேல்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

மெஸ்ஸி விட்டு சென்ற இடம் இன்பநிதிக்கானது என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மெஸ்ஸி விட்டு சென்ற இடம் இன்பநிதிக்கானது என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக பரவும் ஸ்கிரீன்ஷாட்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி சமீபத்தில் கால்பந்து போட்டியில் பங்கேற்பதாக ஸ்பெயின் சென்றதாக ஊடகங்களில் செய்தி வந்தது.

இதனையடுத்து ஊடகவியலாளர் செந்தில் வேல் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டதாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அந்த ஸ்க்ரீன்ஷாட்டில்,

மெஸ்ஸி விட்டு சென்ற இடம் உங்களுக்கானது, விரைவில் Barcelona அணி உங்களை தேடி வரும் .

முத்துவேல் கருணாநிதி பரம்பரையில் முதல் கால்பந்து வீரரான தம்பிக்கு வாழ்த்துகள்..

என்று செந்தில் வேல் பதிவிட்டுள்ளதாக உள்ளது.

இந்த ஸ்க்ரீன்ஷாட்டை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

மெஸ்ஸி விட்டு சென்ற இடம் இன்பநிதிக்கானது என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக பரவும் ஸ்கிரீன்ஷாட் - 1

Facebook Link

மெஸ்ஸி விட்டு சென்ற இடம் இன்பநிதிக்கானது என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக பரவும் ஸ்கிரீன்ஷாட் - 2

Facebook Link

மெஸ்ஸி விட்டு சென்ற இடம் இன்பநிதிக்கானது என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக பரவும் ஸ்கிரீன்ஷாட் - 3

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

‘மெஸ்ஸி விட்டு சென்ற இடம் இன்பநிதிக்கானது ‘ என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாகக் கூறி வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய டிவிட்டர் அட்வான்ஸ்ட் சர்ச் (Twitter Advanced Search) முறையை பயன்படுத்தி வைரலாகும் டிவீட் குறித்து தேடினோம்.

இவ்வாறு தேடியதில் செந்தில் வேல் அவர்களின் டிவீட் என்று வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் பின்புலத்தில் இருந்த உண்மைத்தன்மை நமக்கு தெளிவாகியது.

உண்மையில் செந்தில் வேல் பதிவிட்டதாக வைரலாகும் டிவீட், செந்தில் வேல் அவர்களால் பதிவிட்டதே அல்ல; அது செந்தில் வேல் பெயரில் இயங்கும் போலிக் கணக்கிலிருந்து பதிவிட்டதாகும்.

Archive Link

செந்தில் வேல் அவர்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கின் ஐடி @Senthilvel79 என்பதாகும். ஆனால் வைரலாகும் டிவீட் @Senthillvel79 (இதில் ஒரு ‘l’ கூடுதலாக உள்ளது) என்கிற ஐடியிலிருந்து பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த ஐடியிலேயே அது Sarcasm (போலிக் கணக்கு) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

வாசகர்களின் புரிதலுக்காக செந்தில் வேல் அவர்களின் உண்மையான டிவிட்டர் கணக்கையும், அவர் பெயரில் இயங்கும் போலி கணக்கையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

ஒப்பீடு

Also Read: கொடநாடு கொலை வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு அளிப்போம் என்றாரா எடப்பாடி பழனிச்சாமி?

Conclusion

‘‘மெஸ்ஸி விட்டு சென்ற இடம் இன்பநிதிக்கானது‘ என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் ஸ்க்ரீன்ஷாட் உண்மையில் அவர் பெயரில் இயங்கும் போலிக் கணக்கில் பதிவிடப்பட்டதாகும்.

இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Imposter

Our Sources

Twitter Advanced Search:-


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular