Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Politics
கிணத்துக்கடவு தொகுதியில் ஏற்கனவே இறந்த ஒருவருக்கு அதிமுக சார்பில் போட்டியிட சீட்டு அளிக்கப்பட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஆளுங்கட்சியான அதிமுக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை பாஜக, பாமக மற்றும் வேறு சில சிறு கட்சிகளுடன் இணைந்து கூட்டணியாக சந்திக்கவிருக்கின்றது.
இக்கூட்டணியில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இப்பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செலவம் உட்பட அதிமுகவைச் சேர்ந்த ஆறு வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த புதன் ( 10/03/2021) அன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக போட்டியிடவிருக்கும் 171 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. மேலும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக மற்றும் பாஜக கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டத் தொகுதிகள் குறித்தும் அறிவிக்கப்பட்டது.
இதில் அதிமுக சார்பில் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட சீட்டு அளிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி புகைப்படச் செய்தி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archive Link: https://archive.ph/SaU9r

Archive Link: https://archive.ph/HMNk8
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள தாமோதரன் அவர்கள் 13.01.2021 அன்று உயிரிழந்து விட்டதாகவும், அவருக்கே தற்போது அதிமுக வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட சீட்டு அளித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே தாமோதரன் அவர்களின் புகைப்படமும் இச்செய்தியில் இடம்பெற்றிருந்தது.
அந்தப் புகைப்படத்தை கண்டபின்பு, எங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பதையும் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பதையும் நம்மால் உணர முடிந்தது.
புகைப்படத்தில் காணப்படும் நபர் முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதரன் ஆவார். இவர் கொரானாத் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொற்று குணமடைந்த நிலையிலும், நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்புக் காரணமாக சிகிச்சை பலனின்றி கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார்.

இதுக்குறித்த செய்தியை இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்
ஆனால் கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்படுள்ளவர் கழக அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் ஆவார். அவர் இன்னும் உயிருடன்தான் உள்ளார்.

இதனடிப்படையில் பார்க்கும்போது இறந்தவருக்கு அதிமுக சீட் கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு தெளிவாகின்றது.
கிணத்துக்கடவு தொகுதியில் ஏற்கனவே இறந்த ஒருவருக்கு அதிமுக சார்பில் போட்டியிட சீட்டு அளிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=2939424449716041&id=100009455450857
Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=285876543206591&id=100053527428217
Hindu Tamil: https://www.hindutamil.in/news/tamilnadu/621878-ex-minister-passed-away.html
Dinakaran: https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=646647
Dinamalar: https://www.dinamalar.com/news_detail.asp?id=2688601
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
September 27, 2025
Ramkumar Kaliamurthy
September 9, 2025
Vijayalakshmi Balasubramaniyan
August 6, 2025