வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact Checkபாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி குறித்து இப்படி ஒரு கருத்தைக் கூறினாரா?

பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி குறித்து இப்படி ஒரு கருத்தைக் கூறினாரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

பாமக நிறுவனர் ராமதாஸ், சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது தொடர்பாக சர்ச்சைக் கருத்து ஒன்றினைத் தெரிவித்து ட்விட் போட்டது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

பாமக
Source: Twitter

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், தமிழகத்தில் பெயர் பெற்ற அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியும் தேர்தல் களத்தில் பரபரப்பாக இயங்கி வருகின்றது.

இந்நிலையில், அக்கட்சியின் தலைவரான ஜி.கே.மணி, பாமகவின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அதன் நிறுவனரான ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

இச்சூழ்நிலையில், சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் மட்டுமே பாமக அதிமுகவுடன் பாமக கூட்டணி என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் பாமக குறித்து வலம் வருகிறது.

இந்த நிலையில், கூட்டணி குறித்த விமர்சனங்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள், ‘சும்மா என்னோட பழைய ட்வீட் எல்லாம் கிண்டிக்கிட்டு இருக்காதீங்கடா..உங்க இஷ்டப்படிதான் கூட்டணி வைக்கணும்னா சோறு திங்க முடியாது. சுண்ணாம்பு தண்ணியதான் கலக்கி குடிக்கணும்’ என்று சர்ச்சைக்குறிய வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாகப் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/ithellamthavarunga/posts/299362508384578

பாமக
Source: Facebook

Archived Link: https://archive.vn/R7RiE

Source: Twitter

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினைக் கூறியதாகப் புகைப்படம் ஒன்று பரவிய நிலையில், அவர் உண்மையிலேயே அப்படி ஒரு கருத்தினை சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவு செய்தாரா என்பது குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

அந்த வகையில், அவரது ட்விட்டர் பக்கத்தில் அதுபோன்ற எவ்வித ட்விட்டும் இடப்படவில்லை.

Source: Twitter

மேலும், அவரது முகப்புத்தக பக்கத்திலும் அருகமைப் பள்ளி முறை என்றால் என்ன? என்கிற பதிவே புதிதாகப் பகிரப்பட்டுள்ளது.

https://www.facebook.com/DrRamadoss/photos/a.445260272304931/1767077660123179/

கூடவே, பரவுகின்ற புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளும் மரியாதைக்குரிய வார்த்தைகளாக இல்லாமல், ஒருவரை கேலி செய்யும் வகையில் பகிரப்பட்டுள்ளது. ராமதாஸ் அவர்களின் சமூக வலைத்தளப் பக்கத்தில் அப்படிப்பட்ட வார்த்தைகளுடன் எவ்வித பதிவும் இடப்படவில்லை என்பதும் நமக்குத் தெரிய வந்தது.

பாமக நிறுவனர்
Source: Twitter

மேலும், பகிரப்படும் புகைப்படத்தில் அவரது அதிகாரப்பூர்வ பக்கம் என்பதைக் குறிக்கும் நீல நிற குறியீடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, அவரது ட்விட் போன்றே இதனை போலியாக எடிட் செய்துள்ளனர் என்பது இதன்மூலமாக நமக்குத் தெரிய வருகின்றது.

Conclusion:

பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள், கூட்டணி அமைப்பது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்ததாகப் பரவும் புகைப்படம் உண்மையில்லை. அது போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False/Fabricated

Our Sources

Dr Ramadoss: https://www.facebook.com/DrRamadoss

Twitter: https://twitter.com/drramadoss

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular