Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கோழிகள் அதிக புழுக்களைத் தின்றதால் சத்துணவு முட்டையில் புழுக்கள் இருந்திருக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாகனூர் அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவுடன் வழங்கப்பட்ட சத்துணவு முட்டைகள் அழுகி அவற்றில் புழுக்கள் இருந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பள்ளி தலைமை ஆசிரியர், சமையலர் உட்பட மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தமிழக அரசின் செய்திக்குறிப்பில் ”ஒவ்வொரு முறையும், உடைந்த அல்லது புழுக்கள் இருந்த முட்டைகள், முட்டை வினியோகஸ்தர்களிடம் இருந்து மாற்றி பெறுவதற்காக தனியாக வைக்கப்பட்டுள்ளதை புகைப்படம் எடுத்து உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்படுகின்றன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சூழ்நிலையில், “சத்துணவு முட்டையில் புழுக்கள் விவகாரம். கோழிகள் அதிக புழுக்களை தின்றதால் ஏற்பட்டு இருக்கலாம். இதேபோல் மற்றொரு சம்பவம் நடக்காமல் இருக்க மாண்புமிகு தளபதி அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழக ஊடகங்களை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என்றாரா அண்ணாமலை?
கோழிகள் அதிக புழுக்களைத் தின்றதால் சத்துணவு முட்டையில் புழுக்கள் இருந்திருக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட நியூஸ் கார்டு ஜூனியர் விகடனுடையது என்றாலும் மேலுள்ள லோகோ சீனியர் விகடன், தேதி 26/12 என்பதாக எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதும், குறிப்பிட்ட எழுத்துரு விகடனுடையது அல்ல என்பதும் நமக்கு உறுதியானது. ஆனால், இச்செய்தியை உண்மை என்றே நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து, இதுகுறித்து ஜூனியர் விகடனின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஆராய்ந்தபோது “10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிச்சயம் உண்டு! – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!” என்கிற கார்டினை எடிட் செய்து பரவும் கார்டு வைரலாகிறது என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, ஜூனியர் விகடன் ஆசிரியர் கலைச்செல்வன் அவர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியானது என்பதை நமக்கு உறுதி செய்தார்.
கோழிகள் அதிக புழுக்களைத் தின்றதால் சத்துணவு முட்டையில் புழுக்கள் இருந்திருக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
September 6, 2024
Vijayalakshmi Balasubramaniyan
January 17, 2023
Vijayalakshmi Balasubramaniyan
June 8, 2021