Saturday, March 15, 2025
தமிழ்

Fact Check

300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் இருப்பதாக வதந்தி

banner_image

300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் இருப்பதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் இருப்பதாக  பரவும் தகவல்

“300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் வள்ளியூரில் ஜீவா சமாதிக்குள் சென்ற சித்தரின் (யோகி) தற்போதைய வாழ்க்கைக்கு சாட்சியாக இருப்பது ஒரு பெரிய பாக்கியம். வள்ளியூர் கோயிலை புதுப்பிக்க சேற்றை தோண்டும்போது அவர் உயிருடன் காணப்பட்டார். சித்தர் யோகாசனத்தில் அமர்ந்திருப்பதைக் காணலாம். நம்பமுடியாத இந்தியா, இது உலகின் பிற பகுதிகளால் கற்பனை செய்யமுடியாது” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் இருப்பதாக  பரவும் தகவல் - 01
Screenshot from Twitter @Lalitha19010440
300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் இருப்பதாக  பரவும் தகவல் - 02
Screenshot from Facebook / fazal.sona.90
300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் இருப்பதாக  பரவும் தகவல் - 03
Screenshot from Facebook /ilango.seeni

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பீஃப் பிரியாணி மிக்ஸ் மசாலாவை தயாரிக்கின்றதா பதஞ்சலி நிறுவனம்?

Fact Check/Verification

300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் இருப்பதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக வைரலாகும் வீடியோவை உற்றுநோக்கியதில், வீடியோவில் காணப்படுபவர் பார்ப்பதற்கு இந்தியர் போன்று இல்லை. மேலும் அவருடன் மற்றொருவர் உரையாடுவதையும் நம்மால் கேட்க முடிந்தது. இந்த உரையாடலனின் மொழியானது தமிழ், ஆங்கிலம் அல்லது மற்ற இந்திய மொழிகளில் இல்லை.

இதனைத் தொடர்ந்து வைரலாகும் வீடியோவை புகைப்படங்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம். இத்தேடலில், ரஷ்யாவில் சிலர் வேட்டைக்கு சென்றபோது கரடி குகையில்  உடல் சிதைந்து உயிருடன் இருந்த இந்நபரை மீட்டதாகவும், கரடி இவரை தூக்கிச் சென்று வருங்கால உணவுக்காக வைத்திருந்ததாகவும், இந்நபரின் பெயர் அலெக்ஸாண்டர் எனவும் குறிப்பிட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு ஊடகங்களில் செய்தி வந்திருந்ததை காண முடிந்தது.

300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் இருப்பதாக  பரவும் தகவல் - 04
Screenshot from Express. co.uk

இச்செய்தியானது மேலும் சில ஊடகங்களில் வந்திருந்தது. அதை இங்கே, இங்கே காணலாம்.

தொடர்ந்து தேடியதில், அலெக்ஸாண்டரை கரடி தாக்கியதாக வந்த தகவல் தவறானது, அவர் கிரானிக் சோரியாஸில் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், அதன் காரணமாகவே அவர் இவ்வாறு உருகுலைந்து காணப்பட்டார் என்று மருத்துவர்கள் கூறியதாக ‘தி சன்’ செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் இருப்பதாக  பரவும் தகவல் - 05
Screenshot from thesun.co.uk

இச்செய்தியும் வேறு சில ஊடகங்களிலும் வந்திருந்தது. அதை இங்கே, இங்கே காணலாம்.

மேலும், இந்த செய்தி பரவிய சில நாட்களிலேயே நோய் தீவிரம் அதிகமாகி அலெக்ஸாண்டர்  உயிரிழந்து விட்டார் என்று ஊடகங்களில் வந்த செய்தியின் வாயிலாக நம்மால் அறிய முடிந்தது.  

300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் இருப்பதாக  பரவும் தகவல் - 06
Screenshot from mirror.co.uk

Also Read: ‘அரபுக்கள் நாம் இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்’ என்கிற புத்தகத்தை வெளியிட்டார்களா திருமாவளனும் எம்.எச்.ஜவாஹிருல்லாவும்?

Conclusion

நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் இருப்பதாக பரவும் தகவல் தவறானது என்பதும், வைரலாகும் வீடியோவில் இருப்பவர் இந்தியாவை சேர்ந்தவர் இல்லை என்பதும், தோல் நோய் காரணமாகவே அவர் இவ்வாறு உருகுலைந்து காணப்பட்டார் என்பதும், தற்போது அவர் உயிருடனே இல்லை என்பதும் நமக்கு தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

The report, from The Sun, Published on 26/06/2019
The report, from Mirror, Published on 06/08/2019


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.