கோவிட் குறித்த செய்திகளைப் பகிரும் வாட்ஸ் அப் குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பிரதமர் மோடி 4:20 என்று மணி காட்டும் கடிகாரத்தின் கீழ் நிற்பதாக பரவும் போலி புகைப்படம்!
Fact Check/Verification
கோவிட் குறித்த செய்திகளைப் பகிரும் வாட்ஸ் அப் குழுக்கள் மீது மத்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில் வைரலாகும் இத்தகவல் முற்றிலும் தவறானது என்பதை அறிய முடிந்தது.
குறிப்பிட்ட செய்தியில் “அறிவிப்பு வாட்ஸ் அப் குழுக்களை நடத்தும் அனைவருக்கும் ஒரு முக்கியத்தகவல். மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளைப் பகிரும் குழுக்களின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.” என்பதாக செய்தி இடம்பெற்றிருந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதலே இச்செய்தி வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, இச்செய்தி குறித்து ஆய்வு நடத்தியதில் பிஐபி கடந்த மார்ச் 30,2020 ஆம் ஆண்டு குறிப்பிட்ட வைரல் மெசேஜ் போலியானது; இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளனர்.
Conclusion
கோவிட் குறித்த செய்திகளைப் பகிரும் வாட்ஸ் அப் குழுக்கள் மீது மத்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாக பரவுகின்ற செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Also Read: உலகக் கோப்பையை வென்றப்பின் மெஸ்ஸி தனது தாயை அணைத்ததாக பரவும் தவறான வீடியோ!
Result: False
Source
PIB Fact Check’s tweet, March 30, 2020
Ministry of Home Affairs website
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)