வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact Checkஅசைவம் உண்பவர்கள் அயோக்கியர்கள் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்ட்!

அசைவம் உண்பவர்கள் அயோக்கியர்கள் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்ட்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: அசைவம் உண்பவர்கள் அயோக்கியர்கள் என்று அண்ணாமலை கூறினார்

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்

“சைவ உணவு உண்பவர்கள்அன்பானவர்கள், நல் ஒழுக்கம் உடையவர்கள். அசைவம் சாப்பிடுபவர்கள் அனைவரும் அயோக்கியர்கள், காட்டுமிராண்டிகள். நான் காட்டுமிராண்டி அல்ல, அன்பானவன்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அசைவம் உண்பவர்கள் அயோக்கியர்கள் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Twitter@Karthikbalan84
அசைவம் உண்பவர்கள் அயோக்கியர்கள் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Facebook/Raju Bhai
அசைவம் உண்பவர்கள் அயோக்கியர்கள் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Facebook/pselvendiran

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மாஃபா பாண்டியராஜன் அறக்கட்டளை கல்விக்கு நிதி உதவி தருவதாக பரவும் வதந்தி!

Factcheck / Verification

அசைவம் உண்பவர்கள் அயோக்கியர்கள் என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

அந்த ஆய்வில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது. அண்ணாமலை தூத்துக்குடியில் ராஜீவ் காந்தி பதவி நீக்கம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார், இதை தந்தி தொலைக்காட்சி நியூஸ்கார்டாக வெளியிட்டிருந்தது.

அந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

தொடர்ந்து தந்தி தொலைக்காட்சியின் சமூக ஊடகப் பொறுப்பாளர் வினோத் குமாரை விசாரிக்கையில், அவரும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை உறுதி செய்தார்.

Also Read: கூலி தொழிலாளியின் மகள் IAS தேர்வில் மூன்றாவது இடம் பிடித்ததாக பரவும் தவறான தகவல்!

Conclusion

அசைவம் உண்பவர்கள் அயோக்கியர்கள் என்று அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources

Report from Thanthi Tv, dated March 24, 2023
Phone Conversation with Vinoth Kumar, Thanthi Tv, dated March 25, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular