Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி 1616 ஆம் ஆண்டில் ஐயப்பன் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வாசகர் ஒருவர் நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் உதவி எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி, அதன் உண்மைத்தன்மை குறித்து கேட்டிருந்தார்.
அப்புகைப்படத்தில் ஒரு நாணயத்தின் இரு பக்கம் காணப்பட்டது. ஒரு பக்கத்தில் சபரிமலை ஐயப்பன் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் ஈஸ்ட் இந்தியா கம்பெனி, ஒரு அணா, 1616 ஆகியவை பொறிக்கப்பட்டிருந்தது. அப்படத்தின் கீழ், “400 வருடங்களுக்கு முன்பு ஐயப்பன் உருவத்துடன் ஆங்கிலேயர் வெளியிட்ட நாணயம். கடந்த 1616 ஆம் வருடம் பிரிட்டனின் கிழக்கு இந்தியா கம்பெனி ஐயப்பன் உருவம் பதித்த நாணயத்தை வெளியிட்டுள்ளது.
சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் வழிபாடு என்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்த வழிபாடு வெகு சில வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டதாக ஒரு சிலர் கூறுவது தவறான தகவல் ஆகும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

சமூக வலைத்தளங்களில் பலரும் இப்படத்தை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.


Also Read: புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து அடையாறு புற்றுநோய் மையத்தில் இலவசமாக தரப்படுகின்றதா?
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி ஐயப்பன் உருவம் பொறித்த நாணயத்தை 1616 ஆம் ஆண்டில் வெளியிட்டதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
கிழக்கந்திய கம்பெனியானது 1600 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது. 1608 ஆண்டில் இந்தியாவில் நுழைந்துள்ளது. முகலாய அரசர் ஜஹாங்கிர் 1613 ஆம் ஆண்டு சூரத்தில் தொழிற்சாலை அமைக்க கிழக்கிந்த கம்பெனிக்கு அனுமதி தந்துள்ளார். இதனையடுத்து 1615 ஆம் ஆண்டில் முகலாய சாம்ராஜ்யம் முழுவதும் தொழிற்சாலை அமைக்க அனுமதித்துள்ளார்.
கிழக்கிந்திய கம்பெனி தொழிற்சாலை அமைக்கவே இந்திய மன்னர்களின் அனுமதி தேவைப்பட்டிருந்த காலக்கட்டத்தில் சொந்தமாக நாணயம் வெளியிட்டதாக, அதுவும் சபரிமலை ஐய்யப்பன் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டதாக பரவும் தகவல் நம்பும்படியாக இல்லை.
ஆகவே கிழக்கிந்திய கம்பெனி எந்த காலக்கட்டத்தில் நாணயம் வெளியிட்டது என்பது குறித்து தேடினோம். இதில் கிழக்கிந்திய கம்பெனி கி.பி.1717 ஆம் ஆண்டு முதன்முதலில் நாணயம் அச்சிட்டு வெளியிட்டிருந்ததை அறிய முடிந்தது. இத்தகவலானது ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் ரிசர்வ் வங்கி இணையத்தளத்தில் பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட நாணயங்களின் படம் இடம்பெற்றிருந்ததையும் நம்மால் காண முடிந்தது. அதில் எந்த நாணயத்திலும் ஐய்யப்பன் படம் பொறிக்கப்பட்டிருக்கவில்லை.
பிரிட்டிஷ் வெளியிட்ட நாணயங்களை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் நமக்கு தெளிவாகுவது என்னவென்றால், கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலில் 1717 ஆம் ஆண்டுதான் முதன்முதலில் நாணயம் அச்சிட்டுள்ளது. பிரிட்டிஷ் வெளியிட்ட எந்த நாணயத்திலும் சபரிமலை ஐயப்பன் உருவம் பொறிக்கப்படவில்லை.
Also Read: குளிர்பானங்கள் வழியாக எபோலா வைரஸ் பரவுவதாக வதந்தி!
இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி 1616 ஆம் ஆண்டில் ஐயப்பன் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Reserve Bank of India Website
Article, from India Today, published on August 26, 2019
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
February 14, 2023
Vijayalakshmi Balasubramaniyan
August 4, 2025
Ramkumar Kaliamurthy
June 9, 2025