புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து அடையாறு புற்றுநோய் மையத்தில் இலவசமாக தரப்படுவதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த “இமிட்டினெஃப் மெர்சிலேட்” (Imitinef Mercilet) எனும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அம்மருந்து அடையாறு புற்றுநோய் மையத்தில் இலவசமாக தரப்படுவதாகவும் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: குளிர்பானங்கள் வழியாக எபோலா வைரஸ் பரவுவதாக வதந்தி!
Fact Check/Verification
புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து அடையாறு புற்றுநோய் மையத்தில் இலவசமாக தரப்படுவதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து அதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக வைரலாகும் தகவலில் குறிப்பிட்டிருப்பதுபோல் இமிட்டினெஃப் மெர்சிலேட் என்பது மருந்தா, அது உண்மையிலேயே புற்றுநோயை முழுமையாக குணப்படுத்துமா என்பதை தேடினோம். இத்தேடலானது “Miracle drug for blood cancer just a hoax: Experts (இரத்தபுற்றுநோயை குணப்படுத்து அதிசய மருந்து என்பது பொய்யானது: நிபுணர்கள் கருத்து)” என்று தலைப்பிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்திக்கு நம்மை அழைத்துச் சென்றது.
வைரலாகும் இத்தகவல் கடந்த 2010 ஆண்டிலிருந்து பரவி வருவதாகவும், இத்தகவல் முற்றிலும் தவறானது எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ அறிஞர்கள் பலரின் கருத்துகள் இச்செய்தியில் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது. வைரலாகும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் இமிட்டினிஃப் மெர்சிலேட் எனும் மருந்தே இல்லை என அவர்கள் கூறியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேடியதில் சென்னை அடையார் புற்றுநோய் மையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை நம்மால் காண முடிந்தது.
அந்த அறிக்கையில்,
அடையார் புற்றுநோய் மையத்தில் “இமிட்டினெஃப் மெர்சிலேட்” (Imitinef Mercilet) எனும் மருந்து கிடைப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. இந்த மருந்து அனைத்து வகை இரத்த புற்றுநோய்களையும் குணப்படுத்துவதாகவும், இம்மருந்து அடையார் புற்றுநோய் மையத்தில் இலவசமாக கிடைப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலானது தவறானது என்பதை நாங்கள் தெளிவுப்படுத்த விரும்புகின்றோம். imatinib mesylate (இமாட்டினிப் மெசிலேட்) எனும் மருந்து வகை ஒன்று உள்ளது. அது ‘கிரானிக் மைலாய்ட் லிக்கோமியா’ எனும் ரத்த புற்றுநோயை குணப்படுத்த தரப்படுவது. இந்த மருந்தானது இந்தியாவிலுள்ள அனைத்து அனைத்து புற்றுநோய் மருத்துவமனைகளிலும் பரிந்துரைக்கப்படுகின்றது.
ஆகவே இந்த தவறான தகவலை காணும்/பெறும் யாரும் இதை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து உலக சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஆய்வு செய்ததில் இமிட்டினெஃப் மெர்சிலேட் எனும் பெயரில் மருந்து இல்லை என்பதையும், ஆனால் இமாட்டினிப் மெசிலேட் எனும் பெயரில் மருந்து உள்ளது என்பதையும் அறிய முடிந்தது.
Also Read: மோடி எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என்று கேள்வி எழுப்பினாரா சென்னை மேயர் பிரியா?
Conclusion
புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து அடையாறு புற்றுநோய் மையத்தில் இலவசமாக தரப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் மலையாளத்தில் பிரசுரமாகியுள்ளது.
Result: False
Sources
The Times of India report dated October 9,2021
Notice in the website of Cancer Institute Adayar
Information in WHO website
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)