வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact Checkதிருடுவதையே குலத்தொழிலாக கொண்ட கூட்டம் என்று ஓபிஎஸ் குறித்து கூறினாரா எடப்பாடி பழனிசாமி?

திருடுவதையே குலத்தொழிலாக கொண்ட கூட்டம் என்று ஓபிஎஸ் குறித்து கூறினாரா எடப்பாடி பழனிசாமி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

திருடுவதையே குலத்தொழிலாக கொண்ட கூட்டம் என்று ஓபிஎஸ் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

திருடுவதையே குலத் தொழிலாக கொண்ட கூட்டம் என்று ஓபிஎஸ் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

“புரட்சித் தலைவர் அம்மாவிற்கு வழங்கிய செங்கோல் உள்ளிட்ட முக்கியப் பரிசுப் பொருட்கள் மற்றும் ஆவணங்களைத் தலைமையகத்தில் இருந்து திருடிக் கொண்டு சென்றிருக்கிறது திருடுவதையே குலத் தொழிலாக கொண்ட அந்த கூட்டம்”  என்று ஓபிஎஸ்ஸின் குலம் குறித்து எடப்பாடி பழனிசாமி இழிவாக பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

திருடுவதையே குலத் தொழிலாக கொண்ட கூட்டம் என்று ஓபிஎஸ் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 01

Twitter Link | Archive Link

திருடுவதையே குலத் தொழிலாக கொண்ட கூட்டம் என்று ஓபிஎஸ் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 02

Facebook Link

திருடுவதையே குலத் தொழிலாக கொண்ட கூட்டம் என்று ஓபிஎஸ் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 03

Facebook Link

Also Read: அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிக்கணிணி வழங்குகின்றதா மத்திய அரசு?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

திருடுவதையே குலத்தொழிலாக கொண்ட கூட்டம் என்று ஓபிஎஸ் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

அதிமுக அலுவலகத்தில் கலவரம் ஏற்பட்டு, அலுவலகத்திற்கு சீல் வைத்ததை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். இச்சந்திப்பில்,  ஓபிஎஸ் ஒரு சுயநலவாதி என்றும்,  ரவுடிகளுடன் அதிமுக அலுவகத்திற்கு வந்து, வன்முறையில் ஈடுபட்டு, ரெக்கார்டுகளை அள்ளிச் சென்றதாகவும் ஓபிஎஸ் குறித்து குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். ஆனால் எந்த ஒரு இடத்திலும் ஓபிஎஸ்ஸின் குலம் குறித்தோ, சாதி குறித்தோ பேசி இருக்கவில்லை.

பாலிமர் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், பாலிமர் நியூஸ் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என உறுதி செய்ய, பாலிமர் நியூஸின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம்.

இதில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, பருப்புகள் உள்ளிட்டனவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரிகளை திரும்பப் பெற வேண்டும் என்று ஈபிஎஸ் கூறியதாக பாலிமர் நியூஸ் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

இந்த செய்தியில் வெளியிடப்பட்டிருந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் பரப்பப்பட்டு வருகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனைடுத்து பாலிமர் நியூஸின் ஆசிரியர் குழுவில் ஒருவரான சார்லஸைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்ததில், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இதை நாங்கள் வெளியிடவில்லை” என்று உறுதி செய்தார்.

இதனைத் தொடர்ந்து மேலும் தேடுகையில், இத்தகவல் பொய்யானது, இதுபோன்ற பொய் செய்தியை பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்திருந்ததையும் காண முடிந்தது.

Also Read: எடப்பாடி பழனிசாமி குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவும் விஷம பதிவு!

Conclusion

திருடுவதையே குலத்தொழிலாக கொண்ட கூட்டம் என்று ஓபிஎஸ் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: False

Sources

YouTube Video from News J, upoaded on 11/07/2022
Phone conversation with Charles, Polimer News, on 22/07/2022
Polimer News Tweet, Tweeted on 20/07/2022
Madurai ADMK’s Tweet, Tweeted on 22/07/2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular