சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeFact CheckNews5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரயிலில் முழு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்ததா?

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரயிலில் முழு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்ததா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரயிலில் முழு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பொதுவாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரயிலில் பயணம் செய்யும்போது அவர்களுக்கு கட்டணம் கிடையாது. ஆனால் இனிமேல் ஒரு வயது குழந்தைக்கும் கூட கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பலராலும் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரயிலில் முழு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்ததாக பரவும் தகவல்

Twitter Link | Archive Link

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரயிலில் முழு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்ததாக பரவும் தகவல் - 01

Facebook Link

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரயிலில் முழு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்ததாக பரவும் தகவல் - 02

Facebook Link

Also Read: பாஜகவில் தொடர்வது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றாரா நயினார் நாகேந்திரன்?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரயிலில் முழு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்ததாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். இதில் வைரலாகும் தகவல் தவறானது என்பதை அறிய முடிந்தது.

PIB (Press Information Bureau வாயிலாக ரயில்வே அமைச்சகம் ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. அச்செய்தியில்,

ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளதாக அண்மையில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதன்படி 1 முதல் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

 ஆனால், அந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை. ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளில் இந்திய ரயில்வே  எந்த மாற்றமும் செய்யவில்லை. பயணிகள் விரும்பினால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்கி அவர்களுக்கு தனியாக இருக்கை அல்லது படுக்கை வசதியுடன் கூடிய இருக்கையை பெற்றுக்கொள்ளலாம். தனி இருக்கை அல்லது படுக்கை வசதியுடன் கூடிய இருக்கை தேவையில்லை எனில், அந்த குழந்தைகள் கட்டணமில்லாமல் பயணம் செய்துக்கொள்ளலாம்

என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Press Release
Screenshot of Press Release

PIBயும் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இத்தகவலை டிவீட் செய்துள்ளது.

மேலும் தேடுகையில் வடக்கு மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே போன்றவைகளும் வைரலாகும் தகவல் தவறானது என்று டிவீட் செய்திருந்ததை காண முடிந்தது.

ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் 2020ஆம் ஆண்டின் சுற்றறிக்கை குறித்து தெரிவித்திருந்தது. அச்சுற்றறிக்கையை ஆய்வு செய்ததில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கட்டண விவரம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டிருந்தது.

2020 circular
Screenshot of 2020 circular

இதனையடுத்து நியூஸ்செக்கர் சார்பில் IRCTC இணையத்தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையை பரிசீலணை செய்தோம்.

 IRCTC இணையத்தளத்தில் குழந்தைகளுக்கு இரண்டு விருப்பங்கள் தரப்பட்டிருந்தது. ஒன்று,  ‘Add infant with birth’ (குழந்தைக்கு படுக்கை தேவை) , மற்றொன்று  ‘Add infant without birth’ (குழந்தைக்கு படுக்கை தேவை இல்லை).

‘Add infant without birth’ விருப்பத்தை நாங்கள் தேர்வு செய்தபோது, தனியாக டிக்கட் வாங்கத் தேவையில்லை என்று பாப் அப் ஒன்று வந்தது (இதையே ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது).

அடுத்தக் கட்டத்தில், ஒருவருக்கான டிக்கட் கட்டணம் கேட்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ‘Add infant with birth’ விருப்பத்தை தேர்வு செய்தபோது இருவருக்கான கட்டணம் கேட்கப்பட்டதை காண முடிந்தது.

Also Read: வாடகை வீட்டிலிருப்பவர்கள் 18% GST செலுத்த வேண்டுமா?

Conclusion

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரயிலில் முழு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்ததாக பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

(இந்த கட்டுரையானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது)

Result: Partly False

Sources

PIB’s Tweet, tweeted on 17/08/2022
Railway Ministry’s Press Release
Railway Ministry’s Circular


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular