வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkமோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தாரா அண்ணாமலை?

மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தாரா அண்ணாமலை?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்ததாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்ததாக பரவும் பதிவு

குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்குபாலம் அறுந்து விழுந்ததில் ஏறத்தாழ 141 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்த இரங்கள் செய்தியில், “குஜராத் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என்று பதிவிட்டதாக கூறி ஸ்க்ரீன்ஷாட் ஒன்று  வைரலாகி வருகின்றது.

மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்ததாக பரவும் பதிவு - 01
Screenshot from Twitter @slbala
மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்ததாக பரவும் பதிவு - 02
Screenshot from Facebook / kamal.b.ariff
மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்ததாக பரவும் பதிவு - 03
Screenshot from Facebook / விபூதி

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஹெல்மெட் அணியாதவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டாரா?

Fact Check/Verification

மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்ததாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இவ்வாறு ஒரு பதிவை அண்ணாமலை பதிவிட்டாரா என்பதை அவரதுஃபேஸ்புக் பக்கத்தில் தேடினோம்.

இத்தேடலில் அண்ணாமலை மோர்பி பால விபத்தில் மரணித்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. ஆனால் இப்பதிவானது ஆங்கிலத்திலேயே பதிவிடப்பட்டிருந்தது. இப்பதிவை ஃபேஸ்புக் தமிழில் மொழிப்பெயர்க்கும்போது அண்ணாமலை நன்றி தெரிவித்ததாக தவறாக மொழிப்பெயர்த்திருந்தது.

மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்ததாக பரவும் பதிவு - 04
Source: Facebook / k.annamalai.ips

அண்ணாமலை இதே பதிவை டிவிட்டரிலும் பதிவிட்டிருந்தார்.

ஃபேஸ்புக்கின் இந்த தவறான மொழிப்பெயர்ப்பு சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து, அண்ணாமலை குஜராத் சம்பவத்தை பற்றி பதிவிட்டிருந்த செய்தியை தமிழில் மீண்டும் ஒரு முறை பதிவிட்டுள்ளார்.

Also Read: 15 தலைவர்களின் படங்களை ஒரே நேரத்தில் வரைந்த நூர்ஜஹான் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதா?

Conclusion

மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பதிவு தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Facebook Post, from Annamalai, President, Tamilnadu BJP, on October 31, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular