Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ஹெல்மெட் அணியாதவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வாசகர் ஒருவர் நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் உதவி எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி, அதன் உண்மைத்தன்மை குறித்து கேட்டிருந்தார்.
அப்புகைப்படத்தில், “ஹெல்மெட் அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பம். உயிரின் மேல் விருப்பம் உள்ளவர்கள் அணிந்து கொள்ளட்டும். ஹெல்மெட் அணியாதவர்களின் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என காவல் துறைக்கு முதல்வர் உத்தரவு. ஹெல்மெட்டுக்காக கவல் துறையினர் அபராதம் கேட்டால் +91 8344606680 என்கிற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

சமூக வலைத்தளங்களில் பலரும் இத்தகவலை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 15 தலைவர்களின் படங்களை ஒரே நேரத்தில் வரைந்த நூர்ஜஹான் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதா?z`
ஹெல்மெட் அணியாதவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக வைரலாகும் தகவலில் குறிப்பிட்டிருந்த மொபைல் எண்ணை தொடர்புக் கொண்டு இத்தகவல் குறித்து விசாரிக்கை முயன்றோம். ஆனால் அந்த எண் பயன்பாட்டில் இல்லை.
இதனையடுத்து மேற்கண்ட தகவல் குறித்து ஊடகங்களில் செய்தி வந்துள்ளதா என தேடினோம். இத்தேடலில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கங்களை தமிழக உயர்த்தியுளளதாக ஊடகங்களில் செய்தி வந்திருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் தேடுகையில், ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று சென்னை போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த பதிவு ஒன்றை நம்மால் காண முடிந்தது.
போக்குவரத்து விபத்துகளை தவிர்க்க தீவிரமான முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், ஹெல்மெட் அணியாததை ஊக்கவிக்கும் விதமாக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக பரவும் தகவல் நம்பும்படி இல்லாததால் வைரலாகும் தகவல் குறித்து தீவரமாக தேடினோம். இத்தேடலில் இத்தகவல் பொய்யானது என்று சென்னை மாநகர காவல் தெளிவு செய்திருந்ததை காண முடிந்தது.
Also Read: ஜெயலலிதா காலில் ப.சிதம்பரம் விழுந்தாரா?
ஹெல்மெட் அணியாதவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook Post, from Greater Chennai Police, on November 01, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
October 14, 2025
Ramkumar Kaliamurthy
April 4, 2022
Ramkumar Kaliamurthy
July 1, 2025