வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact CheckNewsதாம்பரம் மேயர் குழந்தைக்கு ‘திராவிட மாடல்’ என்று பெயர் சூட்டினாரா முதல்வர் ஸ்டாலின்?

தாம்பரம் மேயர் குழந்தைக்கு ‘திராவிட மாடல்’ என்று பெயர் சூட்டினாரா முதல்வர் ஸ்டாலின்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் குழந்தைக்கு திராவிட மாடல் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் சூட்டியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தாம்பரம் மாநகராட்சி மேயர் குழந்தைக்கு திராவிட மாடல் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் சூட்டியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Twitter @doctorBommai
தாம்பரம் மாநகராட்சி மேயர் குழந்தைக்கு திராவிட மாடல் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் சூட்டியதாக பரவும் நியூஸ்கார்ட் - 01
Screenshot from Facebook / Amirtharaj Nadar Ngl
தாம்பரம் மாநகராட்சி மேயர் குழந்தைக்கு திராவிட மாடல் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் சூட்டியதாக பரவும் நியூஸ்கார்ட் - 02
Screenshot from Facebook / Ovm Ganesan

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பிரான்ஸில் சாலையில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் அகற்றப்பட்டனரா? உண்மை என்ன?

Fact Check/Verification

தாம்பரம் மாநகராட்சி மேயர் குழந்தைக்கு திராவிட மாடல் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் சூட்டியதாக நியூஸ்கார்ட் ஒன்று  வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

ஏபிபி நாடின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், அந்நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம்.  இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது.

தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணன் குழந்தைக்கு திராவிட அரசன் என பெயர் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தலைப்பிட்டு ஏபிபி நாடு நியூஸ்கார்ட் ஒன்றை கடந்த செவ்வாயன்று (27/12/2022) வெளியிட்டிருந்தது.

இந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்த நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

மேலும் தேடியதில் வேறு சில ஊடகங்களும் முதலமைச்சர் திராவிட அரசன் பெயர் சூட்டியது குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

தொடர்ந்து தேடியதில், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட அரசன் என்று அவரது மகனுக்கு சூட்டியதற்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்று பதிவிட்டுள்ளதை காண முடிந்தது.

Also Read: எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை அழித்தனரா சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள்?

Conclusion

தாம்பரம் மாநகராட்சி மேயர் குழந்தைக்கு திராவிட மாடல் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் சூட்டியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Sources

Facebook post, from ABP Nadu, on December 27, 2022
Facebook post, from Vasanthakumari kamalakannan, Dated December 28, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular