சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeUncategorized @taகவின் பிக்பாஸ் சீசன் நான்கில் குரல் கொடுத்ததாக வதந்தி

கவின் பிக்பாஸ் சீசன் நான்கில் குரல் கொடுத்ததாக வதந்தி

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பிக்பாஸ் சீசன் நான்கில் கவின் குரல் பயன்படுத்தப்பட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கவின் குறித்து பரவும் தகவல்

Fact Check/ Verification

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நான்கு வருடங்களாகத் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

சினிமாத் துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தைத் தேடிக் கொண்டிருப்பவர்கள், இந்நிகழ்ச்சி தங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்தி தரும் என எண்ணி இதில் பங்கெடுத்து வருகிறார்கள்.

இந்த எண்ணம் ஓரளவுக்கு உண்மையும் கூட. மக்களுக்கு யாரென்றே தெரியாத அல்லது அவ்வளவு பரிட்சயம் இல்லாத பல முகங்கள் இந்நிகழ்ச்சியின் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உதாரணத்திற்கு கூற வேண்டுமானால், ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன், கணேஷ் வெங்கட்ராமன், யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா, தர்ஷன், லோஸ்லியா, முகென் ராவ், வனிதா விஜயகுமார், ஆரி, பாலாஜி முருகதாஸ் என இந்த பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது.

ஆனால் இவர்களையும் தாண்டி இந்நிகழ்ச்சியின் வாயிலாக மாபெரும் புகழையும், ரசிகர்களையும் பெற்றவர்கள் என்றால் அது இருவர் மட்டுமே. ஒருவர் முதல் சீசனில் பங்குப்பெற்ற ஓவியா, மற்றொருவர் மூன்றாம் சீசனில் பங்குப்பெற்ற கவின்.

கவின் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் இடம்பெற்ற தொடர்களான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி முதல் பாகம், மற்றும் சரவணன் மீனாட்சி இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.

அதிலும் சரவணன் மீனாட்சி இரண்டாம் பாகத்தில் இவர் நடித்த வேட்டையன் கதாப்பாத்திரம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைத் தேடித் தந்தது. மேலும் வெள்ளித் திரையிலும் இவருக்கு வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது.

ஆனால் வெள்ளித் திரையில் இவர் நாயகனாக நடித்த சத்ரியன், நட்புனா என்னென்னு தெரியுமா? ஆகிய திரைப்படங்கள் சரியான வரவேற்பைப் பெறவில்லை.  

ஆகவே இவர் வாழ்வின் அடுத்தப் படியை நிர்ணயிக்க பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்குப்பெற்றார். இந்நிகழ்ச்சியானது இவருக்கு மிகப்பெரிய புகழையும், ரசிகர் பட்டாளத்தையும் தேடித் தந்தது.

இப்பொழுது கவின் அவர்கள் ‘லிஃப்ட்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை திரையில் காண இவரது ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் தற்போது நடைப்பெற்று வரும் பிக்பாஸ் நான்காம் சீசனில் இவரது குரல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் நான்காம் சீசனில், ‘சொல்லி அடி’ எனும் போட்டி ஒன்று நடைப்பெற்றது. அப்போட்டியை ‘திண்டுக்கல் தண்டபாணி’ என்பவர் வழி நடத்தினார். ஆனால் கவின் அவர்கள்தான் திண்டுகல் தண்டபாணியாக பேசினார் எனும் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

திண்டுக்கல் தண்டபாணி அவர்களின் குரல், கேட்பதற்கு சற்று கவின் குரல் போன்றுதான் இருந்தது. ஆனால் அது உண்மையா என்பதை அறிய, இத்தகவலை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய்ந்தோம்.

உண்மையும் பின்னணியும்

 சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவல் குறித்து நாம் ஆய்வு செய்ததில், இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை நம்மால் அறிய முடிந்தது. கவின் அவர்களே தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இத்தகவலை மறுத்துள்ளார்.

Source: Twitter

 Conclusion

பிக்பாஸ் நான்காம் சீசனில்  கவின் அவர்களின் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வந்தத் தகவல் முற்றிலும் பொய்யானதாகும். இதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources

Twitter Profile: https://twitter.com/MSimath/status/1333766310921113602

Twitter Profile: https://twitter.com/Akashspreadsluv/status/1333766978666975234

Kavin: https://twitter.com/Kavin_m_0431/status/1334116294501699584

Twitter Profile: https://twitter.com/remohari96/status/1334039966163329025


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular