ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 6, 2024
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 6, 2024

HomeFact Checkஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று நியூஸ்கார்ட் வெளியிட்டதா புதியதலைமுறை?

ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று நியூஸ்கார்ட் வெளியிட்டதா புதியதலைமுறை?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: BSP தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி – புதியதலைமுறை நியூஸ்கார்ட்
Fact: வைரலாகும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டு பரவுகிறது.

ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று புதியதலைமுறை வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”ஒரு கொலை குற்றவாளியை எதுக்குடா தியாகி அளவுக்கு தூக்கி பேசுறீங்க” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது. பகுஜன் சமாஜ் தமிழ்நாடு பிரிவு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.

Screenshot from x @Anti_CAA_23

X Link/Archived Link

Screenshot from X @iSethuuuu

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாமகவிற்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான் என்றாரா சி.வி.சண்முகம்?

Fact Check/Verification

ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று புதியதலைமுறை வெளியிட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம்.

அப்போது, “சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட ஆம்ஸ்ட்ராங் அடிப்படையில் வழக்கறிஞர்” என்றே அவர்களுடைய நியூஸ்கார்ட் வெளியிடப்பட்டிருந்தது. அந்த நியூஸ்கார்டினை முழுவதுமாக வெவ்வேறு குற்ற வழக்குகளைத் தொகுத்து அதில் இடம்பெறச்செய்து எடிட் செய்து பரப்புகின்றனர் என்பது நமக்குத் தெரியவந்தது.

மேலும், இதுகுறித்து புதியதலைமுறையின் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பதுடன் போலி நியூஸ்கார்ட் என்று குறியிட்ட புகைப்படத்தையும் அனுப்பினார். இதன்மூலம், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பது உறுதியாகிறது.

Also Read: பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி அணிந்து காசர்கோடு முஸ்லீம் லீக் அலுவலகம் திறக்கப்பட்டதா?

Conclusion

ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று புதியதலைமுறை வெளியிட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Facebook Post from, Puthiyathalaimurai, Dated July 06, 2024
Phone Conversation with, Ivani, Puthiyathalaimurai, Dated July 08, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular