செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 13, 2024
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 13, 2024

HomeFact Checkவயநாடு பேரிடரில் தாயை இழந்த குரங்குக்குட்டிகள் என பரவும் வீடியோத்தகவல் உண்மையானதா?

வயநாடு பேரிடரில் தாயை இழந்த குரங்குக்குட்டிகள் என பரவும் வீடியோத்தகவல் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: வயநாடு பேரிடரில் தாயை இழந்த குரங்குக்குட்டிகள்

Fact: வைரலாகும் வீடியோ வயநாடு வீடியோ துயரச் சம்பவம் நடப்பதற்கு முன்பே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இவ்வீடியோவிற்கும் வயநாடு பேரிடருக்கும் தொடர்பில்லை.

”வயநாடு பேரிடர் நிலத்தில் நெஞ்சை பதற வைக்கும் காட்சி..* * தாய் குரங்கை இழந்த இரண்டு குழந்தை குரங்கு குட்டிகள் மழையிலும் சேற்றிலும் ஆதரவு தேடி ஒருவரையொருவர் அனைத்துக்கொள்ளும் காட்சி” என்று குறிப்பிட்டு வீடியோ
ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வயநாடு பேரிடரில் தாயை இழந்த குரங்குக்குட்டிகள்

X Link | Archive Link

வயநாடு பேரிடரில் தாயை இழந்த குரங்குக்குட்டிகள்

Archive Link

வயநாடு பேரிடரில் தாயை இழந்த குரங்குக்குட்டிகள்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: வயநாடு நிலச்சரிவில் இறந்தநிலையில் தன்னுடைய குழந்தையை அணைத்துள்ள தாய் என்று பரவும் AI புகைப்படம்!

Fact Check/Verification

வயநாடு பேரிடரில் தாயை இழந்த குரங்குக்குட்டிகள் என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

இத்தேடலில் binduchaudhary485 என்ற பயனை ஐடியை கொண்ட டிக்டாக் பக்கத்தில் வைரலாகும் இவ்வீடியோ ஜூலை 20, 2024 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

வயநாடு பேரிடரில் தாயை இழந்த குரங்குக்குட்டிகள்

இதன்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோ வயநாடு பேரிடர் நடந்த ஜூலை 30 ஆம் தேதிக்கு முன்னரே இப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது என அறிய முடிகின்றது.

தொடர்ந்து binduchaudhary485 என்ற பயனர் ஐடியை கொண்ட இந்த நபர்  குறித்து தேடுகையில் அவர் நேபாளத்தை சார்ந்தவர் என அறிய முடிந்தது.

வயநாடு பேரிடரில் தாயை இழந்த குரங்குக்குட்டிகள்

இந்த நபர் அவரது டிக்டாக் பக்கத்தில் வைரலாகும் வீடியோ தவிர்த்து குரங்கு தொடர்பாக பல வீடியோக்களை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

வயநாடு பேரிடரில் தாயை இழந்த குரங்குக்குட்டிகள்

ஆனால் எந்த வீடியோவிலும் அந்த வீடியோக்கள் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவலை அவரை குறிப்பிட்டிருக்கவில்லை. அதேபோல் வைரலாகும் வீடியோவும் எங்கே எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவலை அவர் தெரிவித்திருக்கவில்லை.

இதன்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக வயநாடு பேரிடருக்கும் இந்த வீடியோவுக்கும் தொடர்பில்லை என்பதை மட்டும் தெளிவாக உணர முடிகின்றது. ஏனெனில் வயநாடு பேரிடர் நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பே இவ்வீடியோ பகிரப்பட்டுள்ளது.

 Also Read: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள தங்கத்தால் செய்யப்பட்ட மீனாட்சி சிலை என்ற தகவல் உண்மையா?

Conclusion

வயநாடு பேரிடரில் தாயை இழந்த குரங்குக்குட்டிகள் என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோத்தகவல் தவறானதாகும். இவ்வீடியோவானது நேபாளத்தை சேர்ந்த டிக்டாக் பயனரால் வயநாடு நிலச்சரிவு சம்பவம் நடப்பற்கு பத்து நாட்களுக்கு முன்பே டிக்டாக்கில் பகிரப்பட்டுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
TikTok post from the user, binduchaudhary485, Dated July 20, 2024
Report from Vikatan, Dated July 20, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular