சனிக்கிழமை, ஆகஸ்ட் 31, 2024
சனிக்கிழமை, ஆகஸ்ட் 31, 2024

HomeFact Checkகலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஆகஸ்ட் 18 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாமா?

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஆகஸ்ட் 18 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாமா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஆகஸ்ட் 18 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம்.

Fact: வைரலாகும் நியூஸ்கார்டு சென்ற ஆண்டு வந்த பழைய நியூஸ்கார்டாகும். மேலும் இத்தகவல் தவறானது என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் அமைச்சர் கீதா ஜீவன் தெளிவு செய்துள்ளார்.

 “உரிமைத் தொகை – புதிய அறிவிப்பு. ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. மாற்றுத்திறனாளி, முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்”  என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஆகஸ்ட் 18 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம்.

Facebook Link | Archive Link

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஆகஸ்ட் 18 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம்.

Facebook Link | Archive Link

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஆகஸ்ட் 18 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம்.

Facebook Link | Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியதா இந்தியா?

Fact Check/Verification

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஆகஸ்ட் 18 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்க்குறித்து தேடினோம்.

இத்தேலில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி (12/08/2023) மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஆகஸ்ட் 18,19,20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம்  என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்ததாக தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்ததது. இப்பதிவில் இது தொடர்பான செய்தி வெளியீடும் இணைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து தேடுகையில் அந்த நியூஸ்கார்டும் ஒரு வருடத்திற்கு முந்திய பழைய நியூஸ்கார்டு என்று அறிய முடிந்தது. 12/08/2023 அன்று வைரலாகும் இந்த நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

இதனையடுத்து தேடுகையில் சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவல் தவறானது என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் அமைச்சர் கீதா ஜீவன் மறுத்துள்ளதை நம்மால் காண முடிந்தது. இத்தகவலானது குழப்பம் ஏறபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டது என்றும், அரசு இதுப்போன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

 Also Read: அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்த ஜோதிகா என்று பரவும் எடிட் புகைப்படம்!

Conclusion

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஆகஸ்ட் 18 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் தவறானதாகும். அமைச்சர் கீதா ஜீவனும் இதை உறுதி செய்துள்ளார். சென்ற ஆண்டின் பழைய நியூஸ்கார்டை வைத்து இந்த பொய் தகவலானது பரப்பப்பட்டு வருகின்றது.

இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
X Post By CMO Tamilnadu, Dated August 12, 2023
X Post By Thanthi TV, Dated August 12, 2023
Report By Puthiya Thalaimurai, Dated August 18, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular