திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact CheckReligionமதப்பிரச்சாரம் செய்த கிறித்தவரை இந்துத்வா கும்பல் தாக்கியதா?

மதப்பிரச்சாரம் செய்த கிறித்தவரை இந்துத்வா கும்பல் தாக்கியதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மதப்பிரச்சாரம் செய்த கிறித்தவரை இந்துத்வா கும்பல் தாக்கியது.

Fact: சொந்த பகை காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது.

மதப்பிரச்சாரம் செய்த கிறித்தவரை இந்துத்வா கும்பல் கொடூரமாக தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இந்த வீடியோவை நியூஸ்செக்கரின் டிப்லைன் எண்ணான 9999499044 என்கிற எண்ணிற்கு அனுப்பி இதுக்குறித்த உண்மையை வாசகர் ஒருவர்கேட்டிருந்தார். ஆகவே சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்றாரா பொன்முடி?

Fact Check/Verification

மதப்பிரச்சாரம் செய்த கிறித்தவரை இந்துத்வா கும்பல் தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் வைரலாகும் சம்பவத்திற்கும் மதத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அறிய முடிந்தது. வைரலாகும் இச்சம்பவம் பீகாரின் கைமூர் பகுதியில் நடந்துள்ளது. சொந்த பகை காரணமாக இத்தாக்குதல் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து இந்தியா டுடேவில் அக்டோபர் 05, 2019 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.

கைமூர் மாவட்டத்தின் பாபுவா தொகுதியின் கவுன்சிலர் மகன் வேறு ஒருவரை பொது இடத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். சுடப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி கைமூர் மாவட்ட மருத்துவமனையில் இறந்துள்ளார். இதன் காரணமாக உயிரிழந்தவருக்கு சொந்தமானவர்கள் கவுன்சிலர் மகனை பொது இடத்தில் வைத்து தாக்கியுள்ளனர். இந்த வீடியோவே தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மதப்பிரச்சாரம் செய்த கிறித்தவரை இந்துத்வா கும்பல் கொடூரமாக தாக்கியதாக பரவும் வீடியோத் தகவல்
Screengrab from India Today

கைமூர் எஸ்.பியை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புகொண்டு வைரலாகும் வீடியோ குறித்து விசாரிக்கையில் அவரும் இதே தகவலையே கூறியுள்ளார். மேலும், இந்த வீடியோவில் இருக்கும் சம்பவத்திற்கும் மதத்திற்கும் எந்த சம்மந்தமுமில்லை, இது ஒரு கிரிமினல்  வழக்கு. இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரு சாரார் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை வைத்து தேவையில்லாத புரளிகளை கிளப்ப வேண்டாம் என்று போலீசார் தரப்பில் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் இதே வீடியோவானது பாஜக எம்.பி ஒருவரால் இந்த தாக்குதல் நடந்ததாக கூறி பரப்பப்பட்ட நிலையில் நியூஸ்செக்கர் இந்தியில் அக்டோபர் 4, 2019 அன்று இது பொய்யான தகவல் என்று நிரூபித்து செய்தி வெளியிடப்பட்டது. அந்த செய்தியை இங்கே காணலாம்.  

Also Read: பாஜகவை எதிர்ப்பது அதிமுக எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறினாரா?

Conclusion

மதப்பிரச்சாரம் செய்த கிறித்தவரை இந்துத்வா கும்பல் கொடூரமாக தாக்கியதாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from India Today, Dated October 05, 2019
Phone Conversation with Superintendent of Police of Kaimur


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular